Thursday, December 24, 2020

Today News செய்திகள் 24.12.2020 | TPC

Today News 24.12.2020 | TPC


தினமும் நியூஸ் உங்களுக்காக..!

அரசுப் பள்ளிகள், அரசு உதவியுடன் இயங்கும் பள்ளிகள், மதராசா பள்ளிகளில் படிக்கும் +2ஆம் மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன், டேப் வாங்குவதற்காக தலா 10,000 ரூபாய் வழங்க மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளது. 



இந்த பணத்தை பயன்படுத்தி மாணவர்கள் மொபைல்போன் வாங்கிக் கொள்ளலாம். மூன்று வாரங்களுக்குள் மாணவர்களின் வங்கிக் கணக்குக்கு நேரடியாகவே பணம் அனுப்பப்படும். அவர்களுக்கு தேவையான ஸ்மார்ட்போன் அல்லது டேப் வாங்கிக்கொள்ளலாம் - மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

-----

ஐஏஎஸ் அதிகாரிகள் 6 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

பால்வளத்துறை ஆணையராக நந்தகோபால் நியமனம், மாநில திட்ட கூடுதல் இயக்குனராக அமிர்த ஜோதி நியமனம்.

வேலை வாய்ப்புத்துறை இணை செயலராக கற்பகம் நியமனம்.

இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக ரமண சரஸ்வதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

-----

அனுமதி பெறாமல் கிராமசபையை கூட்டுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு உத்தரவு - தமிழக அரசு.

கிராமசபை என்ற பெயரை தவறாக பயன்படுத்தி அரசியல் பொதுக்கூட்டம் கூட்டினால் நடவடிக்கை.

அரசியல் ஆதாயம் தேடுவதற்காக கிராமசபை என்ற பெயரில் கூட்டங்கள் நடத்துவது மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும்.

கிராமசபையை ஊராட்சி மன்றத்தலைவர், மாவட்ட ஆட்சியர் மட்டுமே கூட்ட வேண்டும்.

-----

கர்நாடகாவில் இன்று இரவு முதல் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு வாபஸ்:

இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

சுகாதாரத்துறையினர் அடங்கிய தொழில்நுட்ப ஆலோசனை குழு பரிந்துரைகளை ஏற்று அரசு முடிவு.

-----

தமிழகத்தில் கொரோனா இன்றைய நிலவரம் 25.12. 20

1035 புதுத் தொற்றாளிகள்

70,620 பேர்களுக்கு டெஸ்ட் எடுக்கப்பட்டது.

1120 பேஷண்டுகள் டிஸ்சார்ஜான நிலையில் 12 பேர் பலி.

ஆக மொத்தம் 8,11,115 தொற்றாளிகள், 7,89,862 டிஸ்சார்ஜ் & 12,036 மரணங்கள்.

-----

புரெவி புயல் பாதிப்புகளை ஆய்வு .

டிச. 28-ம் தேதி மத்தியக் குழு தமிழகம் வருகை.

புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் விரைவாக வழங்கப்படும் - தமிழக அரசு.

-----

கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம், எர்ணாகுளம், பாலக்காடு, கோவை, சேலம் வழியாக பெங்களூருக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் ஜனவரி இறுதி வரை நீட்டிப்பு.

-----

ஐபிஎல் தொடரில் மேலும் 2 அணிகளை புதிதாக இணைப்பதற்கு பிசிசிஐ ஒப்புதல்.

2022ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் புதிதாக 2 அணிகள் சேர்க்கப்படும்.

புதிதாக சேர்க்கப்படும் அணிகளையும் சேர்த்து 2022ஐபிஎல்லில் 10அணிகள் பங்கேற்கும் - பிசிசிஐ.

-----

கொரோனா தடுப்பு விதிகளுடன் திருநள்ளாறுவில் சனிப்பெயர்ச்சி திருவிழா நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி.

டிச.27 முதல் பிப்.2-ம் தேதி வரை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழாவில் பக்தர்களை அனுமதிக்க கூடாது என தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு.

-----

274 நாட்களுக்குப் பிறகு சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடி செல்ல அனுமதி.

-----

ரயில்வே எச்சரிக்கை:-

ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுக்கான பணத்தை திரும்ப தருவதாக கூறி வங்கிக் கணக்கு விவரங்களை யாராவது போன் மூலம் கேட்டால் தெரிவிக்க வேண்டாம்.

-----

No comments:

Post a Comment

Today News செய்திகள் 03.04.2021 | TPC

Today News 03.04.2021 | TPC Providing Latest Breaking Updated Tamil News - தினமும் நியூஸ் உங்களுக்காக from Tamil Party Club - TPC மும்பை ...