Tuesday, December 22, 2020

Today News செய்திகள் 22.12.2020 | TPC

Today News 22.12.2020 | TPC


ரூ.2,500 பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை இன்று மாலை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.



டிச.26 முதல் 30-ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வினியோகம்:

ரேஷன் கடை ஊழியர்கள் வீடுகளுக்கே சென்று டோக்கன் வழங்க வேண்டும் - தமிழக அரசு.

பொங்கல் பரிசுத்தொகுப்பு, ரூ.2500 ரொக்கம் ஒரே நேரத்தில் வழங்கப்பட வேண்டும்.

எந்த காரணத்தைக் கொண்டும் ரூ.2500யை உறையில் வைத்து வழங்கக்கூடாது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை ஜன.4-ம் தேதி முதல் 12-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

விடுபட்ட, அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு ஜன.13-ம் தேதியில் பரிசுத்தொகுப்பு, ரொக்கத்தொகை வழங்க வேண்டும் - தமிழக அரசு.

(அரிசு குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு 

கிலோ அரிசி, சர்க்கரை அடங்கிய பரிசு தொகுப்பு 

வழங்கப்படுகிறது. ஒரு கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.)

-----

சரக்கு ரயில் துவங்கப்பட்டு இன்றுடன் (22ம் தேதி) 169 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. 

1851ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி தான் இந்தியாவில் முதன்முதலில் சரக்கு ரயில் துவங்கப்பட்டது. 

தற்போதைய உத்தர்காண்ட் மாநிலம் ரூர்க்கியில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிரான் கலியார் எனும் இடத்திற்கு முதன்முதலாக இந்த சரக்கு ரயில் இயக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

-----

சென்னையில் பெட்ரோல்- டீசல் விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 86.51 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 79.21 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

-----

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17.08 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,708,149 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 77,681,288 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 54,533,935 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 106,112 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

-----

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன், எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு.

தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகள் குறித்து மனு.

தமிழக அமைச்சரவை மீது 97 பக்க ஊழல் புகார் பட்டியலை ஆளுநரிடம் அளித்துள்ளோம் – ஸ்டாலின்.

-----

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தங்கள் கல்விக் கட்டணத்தை குறைக்க சொல்லி போராட்டம் நடத்தி வருகின்றனர் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் பயின்று தற்பொழுது தமிழக சுகாதாரத் துறை அமைச்சராக இருக்கும் விஜயபாஸ்கருக்கு போராட்டம் நடத்தி வரும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மீது அக்கறை இல்லை திமுக இந்தக் காலத்திலும் மக்களை சந்திக்க பயந்ததில்லை கிராமங்கள்தோறும் மக்களை நான் சந்தித்து வருகிறேன்.

சிதம்பரம் அண்ணாமலை நகரில் மொழிப்போர் தியாகி ராஜேந்திரன் சிலைக்கு மாலை அணிவித்த பின் திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் பேட்டியின்போது தகவல்.

-----

இந்திய பார் கவுன்சில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

''திட்டமிட்ட தேதியில் 2020 ஆம் ஆண்டுக்கான அகில இந்திய பார் தேர்வு நடைபெறும். இனி தேர்வு தேதியில் எந்த மாற்றமும் இருக்காது. நாடு முழுவதும் 50 நகரங்களில் 140 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது.

-----

தமிழகத்தில் தேர்தல் தேதி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு - இந்திய தேர்தல் ஆணைய செயலாளர் உமேஷ் சின்ஹா.

பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடமாடும் வாகனங்கள் மூலம் தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் - உமேஷ் சின்ஹா.

-----

புதுச்சேரியில் சமூக இடைவெளியுடன் புத்தாண்டை கொண்டாட அனுமதி - முதலமைச்சர் நாராயணசாமி.

கடற்கரை சாலையில் பொதுமக்கள் முக கவசம் அணிந்து புத்தாண்டை கொண்டாடலாம் - நாராயணசாமி.

-----

பெரியார், அண்ணா, கலைஞர், திமுக தலைவரான தனது புகைப்படங்களை தவிர வேறு யார் புகைப்படங்களும் திமுக சுவரொட்டிகளில், பதகைகளில் இடம்பெறக் கூடாது என கட்சி தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார் திமுக தலைவர்  ஸ்டாலின்.

-----

No comments:

Post a Comment

Today News செய்திகள் 03.04.2021 | TPC

Today News 03.04.2021 | TPC Providing Latest Breaking Updated Tamil News - தினமும் நியூஸ் உங்களுக்காக from Tamil Party Club - TPC மும்பை ...