Sunday, December 6, 2020

Today News செய்திகள் 05.12.2020 | TPC

Today News 05.12.2020 | TPC

இன்று ஜெயலலிதா நான்காம் ஆண்டு நினைவு தினம்.


லட்சக்கணக்கான கட்சித் தொண்டர்களை கம்பீரமான இந்த கணீர்க் குரலால் தன்வயப்படுத்தியவர்தான் ஜெயலலிதா.

-----

பாக் ஜலசந்தியில் தீவிரமடையும் தாழ்வு மண்டலம்.

டெல்டா உள்ளிட்ட கடலோரம் அதிக மழை பெய்யும்.

டிசம்பர் 5 இரவு கரைகடந்து டிசம்பர் 6 முழுவதும் 

தமிழகம் எங்கும் அதிக மழை.

-----

விழுப்புரம் மாவட்டம், வீடூர் அணையில் இருந்து 300 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

-----

தோற்றுக்கொண்டே இருந்தவர் என்கிற பெயருக்குரியவரான வால்ட்டிஸ்னி பிறந்த தினம் இன்று 5th December.

-----

இன்று விடுதலைப் போராட்ட வீரர், பத்திரிக்கையாளர், தமிழ் எழுத்தாளர் அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு நாள்.

-----

தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன்_மண்டேலா நினைவு நாள் - டிசம்பர் 5.

-----

கன்னிமாரா பொது நூலகம்

முதன் முதலில் தொடங்க, திட்டம் செய்து அடிக்கல் நாட்டியவர் “போபி இராபர்ட் போர்க் கன்னிமாரா பிரபு” (Bobby Robert Bourke Baron Connemara 1827 - 1902) என்பவராவார். அவர்தம் முயற்சியாலும் சீரிய சிந்தனையாலும் உயர்ந்த எண்ணத்தில் உருவானதுதான் தற்பொழுது வளர்ந்து உயர்ந்தோர் ஆலமரமா காட்சியளிக்குது இந்த நூலகம்.

1896ல் டிசம்பர் 5 ம் நாள் பொது மக்கள் பயன்படுத்தும் வகையில் திறந்து விடப்பட்டது.

-----

உலக மண் தினம்

உலகின் இயற்கைச் சு ழலில் மண் வளமானது மிக முக்கியமான கூறாக இருக்கின்றது. சுற்றுச்சூழல் நிலைத்திருக்க வேண்டுமாயின் மண் வளம் பாதுகாக்கப்பட வேண்டும்.

-----

சென்னையில் பெட்ரோல் விலை 24 காசுகள் அதிகரித்து 86.00 ரூபாய்க்கும், டீசல் விலை 24 காசுகள் அதிகரித்து 78.69 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

-----

பழனி கொடைக்கானல் ரோடு சவரிகாடு பகுதியில் கடும் நிலச்சரிவு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

-----

குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

-----

உலக தன்னார்வலர் தினமின்று  (International Volunteer Day).

இந்நாள் உள்ளூரிலும், சரவதேச அளவிலும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்களை ஊக்குவிப்பதற்கான வாய்ப்பை வழங்குவதோடு, தன்னார்வ முயற்சிகளை ஆதரிக்க அரசாங்கங்கள் ஊக்குவிப்பதோடு, நிலையான இலக்குகளை அடைவதற்கு தன்னார்வப் பங்களிப்பை அங்கீகரிக்கவும் வழி வகுக்கிறது.

-----

சபரிமலையில் 16 தேவஸ்தான ஊழியர்கள், ஒரு காவலர் என மொத்தம் 17 பேருக்கு சபரிமலை ஐயப்பன் கோவிலில் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.

-----

கொரோனாவுக்கு உலக அளவில் 1,523,348 பேர் பலி

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15.23 லட்சத்தை தாண்டியது. 

பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,523,348 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். 

உலகம் முழுவதும் கொரோனாவால் 66,194,303 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 45,782,216 பேர் குணமடைந்துள்ளனர்.

-----

வாசிப்பாளர்களை குவித்து விருது பெற்ற குடியாத்தம் நூலகம்..!

வாசிப்பாளர்கள் அருகி வரும் இந்த காலகட்டத்தில், ஒரே ஆண்டில் 5ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை நூலக உறுப்பினராக்கி மாநில அளவிலான விருதைப் பெற்றுள்ளது குடியாத்தம் நூலகம்.

-----

தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலியாவிற்கு எதிரான, மீதமுள்ள இரண்டு டீ20 போட்டிகளிலும் ஜடேஜா பங்கேற்கமாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

-----

தனிப்பெரும் கட்சியாக ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் டி.ஆர்.எஸ். வெற்றி

-----

தலைகவசம் இல்லையெனில் எரிபொருள் இல்லை - மேற்கு வங்க அரசு

தலைகவசம் இல்லையெனில் இரு சக்கர வாகனங்களுக்கு எரிபொருள் இல்லை என, மேற்கு வங்க அரசு அறிவித்து உள்ளது.

-----

பிரான்சில் உள்ள விஜய் மல்லையாவின் 14 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் அமலாக்கத்துறை பறிமுதல்.

-----

100 நாட்களுக்கு முகக்கவசம் (மாஸ்க்) அணியும் படி அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்க உள்ள ஜோ பைடன் அமெரிக்க மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

-----

No comments:

Post a Comment

Today News செய்திகள் 03.04.2021 | TPC

Today News 03.04.2021 | TPC Providing Latest Breaking Updated Tamil News - தினமும் நியூஸ் உங்களுக்காக from Tamil Party Club - TPC மும்பை ...