Thursday, January 7, 2021

Today News செய்திகள் 07.01.2021 | TPC

Today News 07.01.2021 | TPC

சட்டவிரோத ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஜனநாயக வழிமுறையை தகர்க்க அனுமதிக்க முடியாது.



அமெரிக்காவில் டிரம்ப் ஆதரவாளர்களின் அத்துமீறல் குறித்து பிரதமர் மோடி கருத்து. 

வாஷிங்டனில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் மன உளைச்சல் அளிக்கிறது - பிரதமர் மோடி.

"வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டு நடத்திய வன்முறை நாட்டுக்கே அவமானம்" – ஒபாமா.

------

கடந்த ஞாயிறு அன்று நடந்த குரூப் 1 தேர்வுக்கான உத்தேச பதில்கள் டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் வெளியீடு - விடைகள் பற்றி ஆட்சேபம் இருந்தால் ஜனவரி 14க்குள் தெரிவிக்கலாம் என்றும் அறிவிப்பு.

------

பொங்கலுக்கு பிறகு பள்ளிகளை திறப்பது குறித்த பெற்றோர்களின் கருத்துகளை அரசிடம் தாக்கல் செய்தது பள்ளிக்கல்வித்துறை.

பொங்கலுக்கு பிறகு பள்ளிகளை திறக்க 95% பெற்றோர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன.18ல் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல்.

------

பிரேசிலைச் சேர்ந்த கால்பந்து வீரர் அலெக்ஸ் அபோலினிரியோ மாரடைப்பால் காலமானார்.

------

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்  விமானத்தின் உட்புறங்களை சுத்தம் மற்றும் கிருமி நீக்கம் செய்வதற்காக  ரோபோ தொழில்நுட்பத்தை  இந்தியாவில் முதன்முறையாக அறிமுகப்படுத்துகிறது.

------

ஜனவரி 27ம் தேதி விடுதலையாக வாய்ப்பு என சசிகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல்.

------

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான அனுமதியை தமிழக அரசு திரும்ப பெற பீட்டா அமைப்பு வலியுறுத்தல்

போட்டிகளை நிறுத்தாவிட்டால் ஜல்லிக்கட்டால் மட்டுமன்றி கொரோனா காரணமாகவும் மக்கள் உயிரிழக்க வாய்ப்பு உள்ளதாக பீட்டா அமைப்பு தகவல்.

------

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மருத்துவமனையில் அனுமதி

நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதி என தகவல்.

------

நாடு முழுவதும் JEE-ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு ஜூலை 3ம் தேதி நடைபெறும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு

------

சசிகலா குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி உதயநிதிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார் திவாகரன் மகன் ஜெய் ஆனந்த்.

------

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜையையொட்டி பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கி உள்ளது.

------

மகாராஷ்டிர மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு ரத்து

இதே போன்று இமாச்சலப் பிரதேச அரசும் நான்கு மாவட்டங்களுக்கு அறிவித்திருந்த இரவு நேர ஊரடங்கு திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளது.

------

நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கங்குலி இன்று டிஸ்சார்ஜ்.

------

லஞ்சம் பெற்ற திண்டுக்கல் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக உதவி இயக்குனர் முத்துகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். 

புதிதாக மனைப்பிரிக்க அனுமதி வழங்க ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கும் போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

------

தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில் பணியாளர்களுக்கு ரூ.1000 பொங்கல் போனஸ் -இந்து அறநிலையத்துறை அறிவிப்பு

------

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி : முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் சேர்த்தது.

ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக புகோவ்ஸ்கி 62 ரன்களும், மார்னஸ் 67 ரன்களும் எடுத்தனர்.

------

குமரிக்கடல் முதல் வடதமிழக பகுதிகள் வரை வளிமண்டல சுழற்சி நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

இதன் காரணமாகவும், கிழக்கு திசை காற்று காரணமாகவும் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

------

No comments:

Post a Comment

Today News செய்திகள் 03.04.2021 | TPC

Today News 03.04.2021 | TPC Providing Latest Breaking Updated Tamil News - தினமும் நியூஸ் உங்களுக்காக from Tamil Party Club - TPC மும்பை ...