Tuesday, February 2, 2021

Today News செய்திகள் 02.02.2021 | TPC

Today News 02.02.2021 | TPC

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை cbse.gov.in தளத்தில் இன்று வெளியிடப்படுகிறது.

சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கு மே 4 முதல் தேர்வுகள் ஆரம்பம்.



ஜூன் 7ஆம் தேதி வரை பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளது.

------

சி.பி.எஸ்.இ 12 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதன்படி, சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் மே 4-ம் தேதி முதல் ஜூன் 11-ம் தேதி வரை காலை, மதியம் என இரு பிரிவுகளாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காலை நடைபெறும் தேர்வு காலை 10.30 மணி முதல் 1.30 வரை நடைபெறுகிறது. மதியம் நடைபெறும் தேர்வு 2.30 மணி முதல் 5.30 மணி வரை நடைபெறுகிறது. மார்ச் 1-ம் தேதி முதல் சி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் தொடங்கும்.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் மே 4-ம் தேதி முதல் ஜூன் 7-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு காலை 10.30 மணி முதல் 1.30 வரை நடைபெறுகிறது

சிபிஎஸ்இ 12 வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை:

04-05-2021 காலை   ஆங்கிலம்

15-05-2021  மதியம்    தமிழ்

17-05-2021  காலை    அக்கவுண்டன்சி

18-05-2021  காலை    வேதியல்

 24-05-2021  காலை   உயிரியல்

25-05-2021  காலை பொருளியல்

31-05-2021 காலை இந்தி

01-06-2021  காலை கணிதம்

02-06-2021 காலை புவியியல்

10-06-2021 காலை வரலாறு

11-06-2021 காலை வேளாண்

சிபிஎஸ்இ 10 வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை:

06-05-2021  காலை ஆங்கிலம்

10-05-2021 காலை  இந்தி

11-05-2021 காலை  தமிழ்

15-05-2021 காலை  அறிவியல்

21-05-2021 காலை  கணிதம்

27-05-2021 காலை சமூக அறிவியல்.

------

அரசு அலுவலகங்கள் இனி பசு சிறுநீர் மூலம் செய்யப்பட்ட பினாயிலால் மட்டுமே சுத்தம் செய்யப்பட வேண்டும்!” - .பி. அரசு

------

ஆண், பெண் திருமண வயதை ஒரே மாதிரி நிர்ணயிக்க கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. பெண்களுக்கு திருமண வயது 18 என்றும், ஆண்களுக்கு 21 என்றும் மாறுபடுவது பாலின பாகுபாட்டை ஊக்குவிப்பதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

------

கோவையில் வரும் 8ஆம் தேதி முதல் யானைகள் புத்துணர்வு முகாம்.

மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுப்படுகையில் 48 நாட்கள் முகாம் நடைபெறும்.

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் யானைகள் முகாமில் பங்கேற்பு.

------

தமிழகத்தில் பிப்.5 ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெறும்.

சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு.

ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கப்பட்ட கூட்டத்தொடர் மேலும் 3 நாட்கள் நடைபெறவுள்ளது.

------

மியான்மரில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ள சூழலில், அங்குள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் இந்திய தூதரகம் அறிவுரை.

மியன்மரில் ராணுவ ஆட்சி தொடர்ந்தால் மீண்டும் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

------

ஜன 27ம் தேதி திறக்கப்பட்ட ஜெயலலிதா சாமதி பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டது.

------

வரும் தேர்தலில், அதிமுக கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி நீடிக்கும்.

- சரத்குமார்

------

'ஜகமே தந்திரம்' கிட்டத்தட்ட  ஒரு வருசத்துக்கும் மேலா ரிலீஸுக்குக்  வெயிட்டிங்-கில் இருக்குது.. 'Y Not Stuidos' நிறுவனத்தின் சஷிகாந்த், ரிலையன்ஸ் நிறுவனத்தோடு இணைந்து தயாரிச்சிருக்கும் படமிது.

------

அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கு வழங்கப்படும் முன்பணம் ரூ.40 லட்சமாக உயர்வு.

வீடு கட்டுவதற்கான முன்பணத்தை ரூ.25  லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு.

------

ராமேஸ்வரம் ராமநாத ஸ்வாமி கோவிலில் கொரணோ அச்சம் காரணமாக 11 மாதங்களாக 22 தீர்த்தங்களிலும் பக்தர்கள்  நீராட விதிக்கப்பட்ட தடை இன்று விலக்கி கொள்ளப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் இன்று முதல் பக்தர்கள் நீராட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

------

மக்கள் தங்கள் வீடுகளில் இருந்தே 1100 என்ற எண்ணிற்கு அழைத்து அரசின் சேவைகளை பெறலாம்.

அரசின் சேவைகளை பெற தொலைபேசி எண் 1100.

------

சென்னையில் பெட்ரோல்-டீசல் விலை மாற்றம் இல்லாமல் பெட்ரோல் விட்டர் ரூ.88.82 க்கு விற்பனை; டீசல் லிட்டர் ரூ.81.71 க்கு விற்பனை.

------

Friday, January 22, 2021

Today News செய்திகள் 22.01.2021 | TPC

Today News 22.01.2021 | TPC


சின்னம்மா பூரண உடல்நலம் பெற வேண்டி சிறப்பு பூஜைகள்
பல்வேறு கோயில்களில் அ.ம.மு.க.வினர் வழிபாடு!



பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவை பெங்களூரு பழைய விமான நிலையம் அருகே உள்ள மணிப்பால் மருத்துவமனைக்கு மாற்ற ஆலோசனை!
------

சசிகலாவை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற தடையில்லா சான்றிதழ் வழங்க விக்டோரியா மருத்துவமனை மறுப்பு தெரிவித்துள்ளது. விக்டோரியா மருத்துவமனையிலேயே அனைத்து வசதிகளும் இருப்பதால் வேறு மருத்துவமனைக்கு பரிந்துரைக்க முடியாது என குறிப்பிட்டுள்ளது.
------

சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நிகழ்ந்த கொள்ளை!

ஓசூர் முத்தூட் பைனான்ஸ் அலுவலகத்தில் துப்பாக்கி முனையில் ரூ. 7 கோடி மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.

இன்று காலையில் வங்கி ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்தபோது 6 பேர் வாடிக்கையாளர்கள்போல் பின் தொடர்ந்துவந்துள்ளனர். வங்கியை திறந்தபிறகு உள்ளே நுழைந்த கும்பல் துப்பாக்கியைக் காட்டி அவர்களை மிரட்டி, அலுவலகத்தின் மேனேஜர் உட்பட 6 பேரை கட்டிப்போட்டு, லாக்கரின் சாவியை வாங்கி, அதில் வைக்கப்பட்டிருந்த 25,091 கிராம் தங்க நகைகளையும், 96 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
------

கொரோனா தொற்று காரணமாக கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு.
------

சளி, இருமல் இருந்தால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்: பள்ளிக்கல்வித் துறை.
------

லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை கவலைக்கிடம்; தனி விமானத்தில் மருத்துவமனை விரைந்த குடும்பத்தினர்!
------

தமிழகத்தில் கொரோனா இன்றைய நிலவரம் 22.01.21
574 புதுத் தொற்றாளிகள்.
இதில் 155 சென்னைவாசிகள். 
61,922 பேர்களுக்கு டெஸ்ட் எடுக்கப்பட்டது
689 பேஷண்டுகள் டிஸ்சார்ஜ் ஆன நிலையில் 8 பேர் பலி.
ஆக மொத்தம் 8,33,585 தொற்றாளிகள், 8,16,205 டிஸ்சார்ஜ் & 12,307 மரணங்கள்.
------

நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிமுகம்; முதற்கட்டமாக 35 வேட்பாளர்கள் அறிவிப்பு.

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் ஒரே கட்சி, நாம் தமிழர் மட்டுமே.

அடிப்படை மாற்றத்தையும், தூய அரசியலையுமே விரும்புகிறோம் - சீமான்.
------

வேளாண் சட்டம் தொடர்பாக, விவசாயிகளுடனான 11வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி.

கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படாமல், பேச்சுவார்த்தை நிறைவு.

புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என விவசாய சங்கங்கள் மீண்டும் வலியுறுத்தல்.
------

இந்தியாவில் 12 மாநிலங்களில் பறவை காய்ச்சல் நோய் பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய கால்நடை பராமரிப்புத்துறை தெரிவித்துள்ளது. மத்தியபிரதேசம், அரியானா, மராட்டியம், சத்தீஷ்கர், இமாச்சலம், குஜராத் ஆகிய மாநிலங்களில் பறவை காய்ச்சல் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து உத்திரபிரதேசம், உத்திரகாண்ட், டெல்லி, ராஜஸ்தான், ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்களிலும் பறவை காய்ச்சல் தொற்று ஏற்பட்டிருக்கிறது.
------

சசிகலாவின் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு 98 சதவீதமாக உயர்ந்துள்ளது என பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை தகவல் தெரிவித்திருக்கிறது. 3 நாட்களுக்கு முன்பு சசிகலா உடலில் 75 சதவீத ஆக்சிஜன் அளவே இருந்தது. சசிகலா தெளிவாகவும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாவும் விக்டோரியா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
------

சபரிமலையில் இந்தாண்டு மகரவிளக்கு பூஜை காலத்தில் ரூபாய் 21.17 கோடி மட்டுமே வருவாய் கிடைத்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குறைந்த அளவிலேயே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால் வருவாய் குறைந்தது. கடந்தாண்டு மகர விளக்கு பூஜை காலத்தில் ரூபாய் 269 கோடி வருவாய் கிடைத்த நிலையில் தற்போது 92.2 சதவீதம் குறைந்துள்ளது.
------

சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். வலதுகாலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கமல்ஹாசன் டிஸ்சார்ஜ் ஆனார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சிறு விபத்தினால் நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சித் தலைவருமான கமல்ஹாசனின் காலில் சிறு எலும்பு முறிவு ஏற்பட்டது.
------

வாரணாசியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள பணியாளர்களுடன் பிரதமர் மோடி உரை.

கொரோனா தடுப்பூசியில் ஏதேனும் குறைபாடு உள்ளதா? தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களிடம் பிரதமர் மோடி கேள்வி.
------

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அமைச்சர் எஸ் பி வேலுமணி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் நவநீதகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
------

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து உள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,660-க்கும் சவரன் ரூ.37,280க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.71.40க்கு விற்பனையாகிறது.
------

போதை பொருள் வழக்கில் ஜாமீன்: 140 நாட்களுக்கு பிறகு விடுதலையாகிறார் ராகிணி.
------

10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் இலவசப் பொதுத்தேர்வு வழிகாட்டி நூல்: ஒடிசாவில் அறிவிப்பு.
------

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இல்லம் ஜன.28ல் மக்கள் பார்வைக்கு திறப்பு:

வருகின்ற ஜனவரி 28ஆம் தேதி முதல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் மக்கள் பார்வைக்காக திறக்கப்படவுள்ளது- அமைச்சர் பாண்டியராஜன்.
------

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர்:
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.




கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் தயங்க வேண்டாம்   -சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.
------

ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அர்னால்டுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில் அர்னால்டின் புகழ்பெற்ற டெர்மினேட்டர் படத்தில் வரும், "வாழ வேண்டும் என்றால் என்னுடன் வாருங்கள்" என்ற வசனத்தை கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்றும்  கேட்டுக் கொண்டுள்ளார்.
------

Thursday, January 21, 2021

Today News செய்திகள் 21.01.2021 | TPC

Today News 21.01.2021 | TPC


பிரபல கிறிஸ்துவ போதகர் பால் தினகரனுக்கு சொந்த நிறுவனத்தில் நடந்த சோதனையில் கணக்கில் வராத வெளிநாட்டு முதலீடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 


மேலும், அவருக்கு சொந்தமான இடங்களில் மேலும் 2 நாட்களுக்கு சோதனை தொடரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
------
அடுத்த மாதம் கல்லூரிகள் திறப்பு?

தமிழகத்தில் முதலாமாண்டு மற்றும் 2-ம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு அடுத்த மாதம் முதல் நேரடி வகுப்புகள் தொடங்க உயர்கல்வித்துறை திட்டம்.

மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தபிறகு விடுதிகளில் அனுமதிக்க பரிசீலனை.
------
நிவர் புயல் பாதிப்பு; ரூ.26.5 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு. 

மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.16 கோடியும், மாநில நிதியாக ரூ.10 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது.
------
புனே: மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள சீரம் இந்தியா நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சீரம் நிறுவனத்தில்தான் கொரோனா தடுப்பூசி மருந்தான கோவிஷீல்டு உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும், அங்கு தயாரிக்கப்பட்ட மருந்துக்களை பல மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
------
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். பிரச்சார கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, மதுராந்தகம் ஏரி சுமார் ரூ.125 கோடியில் விரைவில் புனரமைக்கப்படும். தமிழகம் முழுவதும் 5 பொறியாளர்களை அமைத்து நீர் மேலாண்மை திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தப்பட்டன என்றார்.
------
சசிகலா உடல்நிலை குறித்து அறிய டாக்டர் சிவக்குமார் உடன் பெங்களூரு விரைந்தார் டிடிவி தினகரன்.

இளவரசி மகனும் ஜெயா தொலைக்காட்சி சி.இ.ஒ-வுமான விவேக்கும் பெங்களூரு சென்றார்.
------
சசிகலாவுக்கு எற்பட்டுள்ள உடல்நலக் குறைவு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

- மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கறிஞர் ராஜராஜன் புகார்.
------
சசிகலா உயிருக்கு ஆபத்து இருப்பதாக சசிகலா தம்பி திவாகரன் குற்றச்சாட்டு

சசிகலாவுக்கு கடந்த 10 நாட்களாக சரியாக சிகிச்சை தரப்படவில்லை. எங்களுக்கு துரோகத்திற்கு மேல் துரோகம் நடக்கிறது. சசிகலாவுக்கு உடனே சி.டி.ஸ்கேன் எடுக்க வேண்டும்.
- திவாகரன்
------
பெங்களூரில் டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்பு: 

சசிகலா உடல் நிலை சீராக உள்ளது.

சசிகலாவுக்கு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சசிகலாவுக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிடி ஸ்கேன் மூலமும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

சசிகலாவின் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைவாக உள்ளது.
சசிகலாவை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க விரும்புகிறோம்.

சசிகலா உடல்நிலையில் கவலைப்படும்படி எதுவும் இல்லை என்று டாக்டர்கள் கூறியுள்ளனர்.
---
தொண்டர்கள் முகக்கவசம் அணிந்து  சமூக இடைவெளி விட்டு சின்னம்மாவுக்கு சரியான முறையில் வரவேற்பு அளிக்க வேண்டும்.

கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்.
------
மூன்றே நாள்களில் 2.5 கோடி டவுன்லோடு... - 'சிக்னல்' செயலியின் கிடுகிடு வளர்ச்சி!

கடந்த ஜனவரி 14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரையில் மட்டும் இந்தியாவில் 24.6 மில்லியன் பயனர்கள் சிக்னல் செயலியை இன்ஸ்டால் செய்துள்ளனர்.
------
மருதமலை கோவிலில் நாளை தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்: தேரோட்டம் ரத்து.
------
மதுபானங்களுக்கு ரசீது வழங்க உத்தரவு:

மதுபான கடைகளில் விற்கப்படும் மதுபானங்களுக்கு உரிய ரசீது கொடுக்க வேண்டும்.

மதுபானங்களை, அதிக விலைக்கு விற்கும் விற்பனை பிரதிநிதிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவு - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
------
தடுப்பூசியை செலுத்தாமல் உடலின் மீது வைத்துப் பொய்யாகப் படம்பிடித்த அதிகாரிகள்.

கர்நாடகத்தின் தும்கூரில் தடுப்பூசி போட்டுக்கொண்டதாகப் பொய்யாகப் படம்பிடித்துக் கொண்ட மாவட்ட நலவாழ்வு அதிகாரி, செவிலியர் கல்லூரி முதல்வர் ஆகியோரைப் பணிநீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
------
ஆந்திராவில் வீடுவீடாக சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார்.

13 மாவட்டங்களில் உள்ள கிராம பணியாளர்கள் மூலம் மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்க ஆந்திர அரசு திட்டம்.
------
ராஜா முத்தையா கல்லூரி மூடல்:

கடலூர்: சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி காலவரையின்றி மூடல்.

அரசு மருத்துவ கல்லூரிக்கு இணையான கட்டணம் கேட்டு 43 நாட்களாக போராட்டம் நடைபெறும் நிலையில் மூடல். 

மாலை 4 மணிக்குள் மாணவர்கள் விடுதிகளை விட்டு வெளியேற உத்தரவு.
------
திமுக கூட்டணிக்குள் கமலை கொண்டுவர முயற்சிக்கவில்லை. ஆனால், அவர் வந்தால் வரவேற்போம் - கே.எஸ்.அழகிரி
------
விசிக தனி சின்னத்தில்தான் போட்டி:

விடுதலை சிறுத்தைகள் கட்சி தனிச்சின்னத்தில் போட்டியிடுவது உறுதி.

உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட எங்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை - திருமாவளவன்.
------
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு, சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு.

தனது முதல் கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலியாவில் முடித்து கொண்டு சொந்த கிராமத்திற்கு வருகை.

செண்டை மேளம் முழங்க, சாரட் வண்டியில் ஏறி, ஊர்வலம்.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் நடராஜனை 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். வெளிநாட்டில் இருந்து திரும்பி இருப்பதால் நடராஜனை தனிமைப்படுத்தி கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் நடராஜன் உடன் கைகுலுக்கி கொள்வதற்கும் அவருக்கு சால்வை அணிவிக்கவும் வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சேலம் சின்னம்பட்டியை சேர்ந்த நடராஜன் ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக விளையாடி அனைவரது பாராட்டுகளையும் பெற்றவர்.
------

Monday, January 18, 2021

Today News செய்திகள் 18.01.2021 | TPC

Today News 18.01.2021 | TPC

தமிழகத்தில் புக்கிங் செய்த 30 நிமிடத்தில் காஸ் சிலிண்டர் வழங்கப்படும்.


பிப்ரவரி 1ம் தேதி முதல் தட்கல் முறையில் சிலிண்டர் டெலிவரி திட்டம்.

இந்தியன் ஆயில் நிறுவனம் இத்திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவருகிறது.

------

2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் பழனிசாமி:

பிரதமர் மோடியை நாளை காலை சந்திக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி.

நதிநீர் இணைப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க கோரி பிரதமரிடம் வலியுறுத்த உள்ளதாக தகவல்.

அரசியல் குறித்தும் ஆலோசிக்கப்பட வாய்ப்பு.

------

மருத்துவ படிப்பில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்கள் 20-ஆம் தேதி முதல் கல்லூரிகளுக்கு வரவேண்டும்"

“அனைத்து மாணவர்களும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே கல்லூரிகளுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும்" -மருத்துவ கல்லூரி முதல்வர்களுக்கு, இயக்குனரகம் உத்தரவு.

------

தூர்தர்ஷனில் சமஸ்கிருத செய்தி அறிக்கை ஒளிபரப்ப தடை கோரி வழக்கு:

மனுதாரருக்கு சமஸ்கிருத செய்தி அறிக்கை தேவையில்லை எனில் தொலைக்காட்சியை அணைத்து வைத்து கொள்ளலாம்.

அல்லது வேறு சேனலை மாற்றி கொள்ளலாம், இதைவிட முக்கிய பிரச்சினைகள் பல உள்ளன - சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கருத்து.

------

அதிமுகவில் புதிய நிர்வாகிகளை நியமிக்க தடையில்லை - சென்னை உயர்நீதிமன்றம்.

அதிமுகவில் உட்கட்சி தேர்தல் நடத்தும் வரை, புதிய நிர்வாகிகள் நியமனத்துக்கு தடை விதிக்க கோரிய வழக்கு தள்ளுபடி.

------

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் - சட்டப் பேரவையில் தீர்மானம்.

சிறப்பு சட்டமன்ற கூட்டம் இன்று கூடிய நிலையில் தீர்மானம் நிறைவேற்றம்.

------

வடகிழக்குப் பருவமழை நாளையுடன் விடைபெறுகிறது - வானிலை மையம்

வடகிழக்குப் பருவமழை விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன.

அக்டோபரில் தொடங்கிய வடகிழக்குப் பருவமழை ஜன.19ஆம் தேதியுடன் விடை பெறுகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும் - வானிலை ஆய்வு மையம்.

20, 21 ஆகிய தேதிகளில் தென்தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு.

------

ஜனவரி 27ம் தேதி சசிகலா விடுதலையாகவுள்ள நிலையில் பிப்ரவரி 5ல் இளவரசியும் விடுவிக்கப்படுகிறார்.

சொத்துகுவிப்பு வழக்கில் ரூ.10 கோடி அபராதம் செலுத்தாததால் சுதாகரன் விடுதலையில் தாமதம் என தகவல்.

------

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற இந்திய அணிக்கு 328 ரன்கள் இலக்கு.

பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 294 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்தியா அணி சார்பில் சிராஜ் 5 விக்கெட்களையும், தாக்கூர் 4 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

------

ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம்:

மக்கள் மன்றத்தில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு வேறு கட்சியில் இணையலாம் - ரஜினி மக்கள் மன்றம் சார்பில் அறிக்கை.

------

10, 12ஆம் வகுப்பு மாணவர்கள் சீருடை, பழைய பஸ் பாஸ் மூலம் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்.

10, 12ஆம் வகுப்புகளுக்கு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தகவல்.

------

“பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு வாரத்துக்குள் அனைத்து பள்ளிகளுக்கும் மருத்துவ குழு செல்லும்; மாணவர்களின் உடல் நிலையை பரிசோதனை செய்யவே மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது!” - பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன்.

------

தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசுத்தொகுப்பு விடுபட்டவர்களுக்கு இன்று முதல் வழங்கப்படும்.

ஜன. 4 முதல் 13 வரை 2.02 கோடிக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட நிலையில் விடுபட்டவர்களுக்கு இன்று முதல் வழங்கப்படும்.

------

ஜனவரி 21ல் கலைஞர் தி.மு.க. உதயமாகிறது. மு.க.அழகிரி அதிரடி அறிவிப்பு!

------

இந்திய ராணுவத்தில் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது பைக் ஆம்புலன்ஸ் சேவை.

------

Wednesday, January 13, 2021

Today News செய்திகள் 13.01.2021 | TPC

Today News 13.01.2021 | TPC

போகிப் பண்டிகை:



வழக்கமான உற்சாகத்துடன் தமிழகம் முழுவதும் போகிப் பண்டிகை கொண்டாட்டம்; பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தி உற்சாகம்!

------

போகிப்பண்டிகையையொட்டி சென்னை விமானநிலைய ஓடுபாதையில் புகை மண்டலம் சூழந்துள்ளதால் சுமாா் 17 விமானங்கள் வருகை, புறப்பாடு தாமதமாகி பயணிகள் அவதி.

------

“சேலம், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறும்"-அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.

ஜல்லிக்கட்டு போட்டியை ஜன.15 முதல் ஜன.31 வரை நடத்த அனுமதி.

------

யூ டியூப் சேனல்களுக்கு சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை-ஆபாசமான வீடியோக்களை நீக்கவும் உத்தரவு.

ஆபாசமான பேட்டிகளை ஒளிபரப்பினால் கடுமையான நடவடிக்கை - சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை.

ஆபாசமான பேட்டியை ஒளிபரப்பியதாக யூ டியூப் சேனல் ஒன்றின் உரிமையாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அதிரடி.

------

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடத்த ரூ.621 கோடி செலவாகும் என கணக்கீடு - தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ தகவல்.

கொரோனா பயத்தால் பூத்துகள் எண்ணிக்கை அதிகரிப்பதால் கூடுதல் செலவு.

------

கொரோனா காலத்தில் 14 லட்சம் அங்கன்வாடிகள் மூடப்பட்டதால் லட்சக்கணக்கான குழந்தைகள் பாதிப்பு.

நோய் கட்டுப்பாட்டுக்கு பகுதிக்கு வெளியேயுள்ள அங்கன்வாடிகளை ஜனவரி 31ம் தேதிக்குள் திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

------

மது அருந்தக்கூடாது: அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை -  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை

பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை இயக்குனர்  அலுவலகத்தில் இருந்து திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட  9 மாவட்டங்களுக்கு  தடுப்பூசியை அனுப்பி வைத்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் விஜயபாஸ்கர்..

வரும்16ம் தேதி முதல்  இந்தியா முழுவதும் தடுப்பூசி  செலுத்தப்படும் என  மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில்  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் 5,36,500 கோவிட் தடுப்பூசி Dose உள்ளது.

முதல்கட்டமாக 6 லட்சம் தடுப்பூசிகள் செலுத்துவதற்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மண்டலத்தில் 68,800 தடுப்பூசி புதுக்கோட்டை, திருவாரூர், கரூர், அரியலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு வந்துள்ளது.

ஒரு நாளைக்கு 100 பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

தடுப்பூசி போட்ட உடன் எதிர்ப்பு சக்தி வந்துவிட்டது என பொதுமக்கள் எண்ணி விடக்கூடாது -

முதல் டோஸ் போட்ட பின்பு  28 வது நாளில் 2 வது டோஸ் போட வேண்டும், அதனைத் தொடர்ந்து 42 நாட்களுக்கு பிறகே நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.

மது உடல் நலத்திற்கு கேடானது. கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

எவ்வித அச்சமும் இன்றி அனைவரும் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்ட அமைச்சர் தடுப்பூசி போடுபவர்களை தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றார்.

தமிழ்நாட்டில் கோவிட் பாதிப்பு  10 சதவீதம் இருந்த நிலையில் தற்போது 1.2 சதவீதமாக குறைந்துள்ளது.

தடுப்பூசி தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம்.

சமூக வலைகளில் தவறாக பரப்புவார்கள்  மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

------

சமத்துவ பொங்கல் விழா- தி.மு.க தலைவர் ஸ்டாலின் பங்கேற்பு.

மனைவி துர்காவுடன் பொங்கல் விழாவில் பங்கேற்றுள்ளார் தி.மு.க தலைவர் ஸ்டாலின்.

குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார் துர்கா ஸ்டாலின்.

------

விருப்பமுள்ள 10, 12ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம்.

98 சதவிகித மாணவர்கள் பள்ளிக்கு வரவிரும்புகின்றனர்- அமைச்சர் செங்கோட்டையன்.

பள்ளிக்கு வரும் மாணவர்கள், பெற்றோரிடம் கடிதம் பெற்று வரவேண்டும் - பள்ளிக் கல்வித்துறை.

தனியார் பள்ளிகள் திறப்பதற்கு முன் அனுமதி பெற வேண்டும்.

பள்ளிகள் திறப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.

வகுப்பறைக்கு உள்ளே, வெளியே முகக்கவசம் அணிவது கட்டாயம்.

வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் செயல்படும் என அறிவிப்பு.

ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் - பள்ளிக் கல்வித்துறை.

------

வன்முறையை தூண்டும் விதமாக வீடியோ பதிவுயிட்டதால்ஒரு வாரத்திற்கு ட்ரம்ப்-ன் யூடுப் (YouTube Channel) முடக்கம்.

------

Tuesday, January 12, 2021

Today News செய்திகள் 12.01.2021 | TPC

Today News 12.01.2021 | TPC

ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி ஆய்வு!

சென்னை மெரினா கடற்கரையில் கட்டப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.



மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினா கடற்கரையில்ரூ.50.80 கோடி செலவில் நவீன தொழில்நுட்பத்துடன் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. 

நினைவிடத்தில் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பீனிக்ஸ் பறவை வடிவத்தில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பு.

இந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவின் நினைவிடத்திற்குச் சென்றார். 

நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய அவர் பணிகளை பார்வையிட்டு அதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

முதல்வருடன் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அதிமுகவினர் வந்தனர்.

------

விவசாயத்தைப் புரிந்துகொண்ட இளம் தலைமுறையை உருவாக்க வேண்டும்: கமல்ஹாசன்

விவசாயத்தைப் புரிந்துகொண்ட இளம் தலைமுறையை உருவாக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

ஈரோட்டில் செவ்வாய்க்கிழமை நடந்த தொழில்முனைவோர் கலந்துரையாடல் கூட்டத்தில் அவர் பேசியது.


------

கேரளத்தில் மேலும் 5,507 பேருக்கு கரோனா:

இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன்வெளியிட்ட அறிக்கையில்,


இன்று புதிதாக 5,507பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 8,19,766ஆக உயர்ந்துள்ளது.

தற்போது 64,556 பேர் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவித்தார்.

------

கேரளத்தில் நாளை முதல் திரையரங்குகள் திறப்பு: முதலில் வெளியாகிறது விஜய் நடித்த மாஸ்டர் படம்

கேரளத்தில் நாளை முதல் திரையரங்குகள் திறக்கப்படவுள்ளன. 

முதல் படமாக விஜய் நடித்த மாஸ்டர் படம் 350 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

கேரளத்தில் கடந்த பத்து மாதங்களாகத் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. 

இந்நிலையில் நாளை முதல் கேரளத்தில் திரையரங்குகள் மீண்டும் இயங்கவுள்ளன.

------

மேலும் நான்கு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி!

கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், சிவகங்கை ஆகிய மேலும் நான்கு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. ஜனவரி 14 முதல் 31 ஆம் தேதி வரை ஜல்லிக்கட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு, எருதுவிடும் விழாக்களை நடத்தவும் அனுமதி வழங்கியுள்ளது.

------

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி இல்லத்தை பொதுப்பணித்துறை ஊழியர்கள் முற்றுகை

புதுச்சேரி: புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி இல்லத்தை பொதுப்பணித்துறை ஊழியர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பொதுப்பணித்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிவோரை தினக்கூலி ஊழியர்களாக மாற்றம் செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.

------

சட்டப்பேரவை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ரஜினி ஆதரவு அளிக்க மாட்டார்: தமிழருவி மணியன் கருத்து.

------

பறவைக் காய்ச்சலால் நாமக்கல்லில் 2 கோடி முட்டை தேக்கம்: ஒரே வாரத்தில் விலை 90 காசுகள் குறைந்ததால் பண்ணையாளர்கள் கவலை.

நாமக்கல் மண்டலத்தில் நாள்தோறும் 4 கோடி முட்டைகள் வீதம் உற்பத்தி செய்யப்படுகின்றன. 

இதில் 2 கோடி முட்டைகள் கேரள மாநிலத்துக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. 

மீதமுள்ள 2 கோடி முட்டைகள் மாநிலம் முழுவதற்கும், வட மாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

------

மிளகு ரசம், பூண்டு ரசத்தை சாப்பிட்டால் கொரோனா ஓடிவிடும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

------

இந்தியாவில் முதல் 10 கோடி கோவிஷீல்டு மருந்துகளுக்கு மட்டுமே தலா ரூ.200 விலை நிர்ணயம்

வெளிச்சந்தையில் கோவிஷீல்டு மருந்து ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்படும்!

-சீரம் நிறுவனம் தகவல்

------

வேளாண் சட்டங்களை அமல்படுத்த இடைக்கால தடை - உச்சநீதிமன்றம் உத்தரவு.

விவசாயிகள் போராட்டத்துக்கு தீர்வுகாணவும், வேளாண் சட்டங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் குழு அமைக்கப்படும்

வேளாண் சட்டங்கள் தொடர்பாக உள்ள நிறை, குறைகளை குழுவிடம் தெரிவிக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்

------

அரியலூர் மாவட்டதில் கடந்த இரண்டு நாளாக இடைவிடாத தொடர் மழை பதிவாகிய வண்ணம் உள்ளது.

தற்போது அரியலூர் மாவட்டதில் கரும்பு அறுவடை  பணி நடைபெற்று வரும் நிலையில் இந்த தொடர் மழையால் கரும்பு அறுவடை  பணிகள் நடைபெறாமல் உள்ளதால் விவசாயிகள் வேதனை.

------

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்தும், சசிகலா குறித்தும் அவதூறாக பேசியதாக புகார்.

சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ராஜலட்சுமி என்பவர் அளித்த புகாரின் பேரில், காவல்துறை நடவடிக்கை.

------

பொங்கல் விடுமுறை நாட்களான 15, 16, 17ஆம் தேதிகளில், சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் கூட தடை.

ஏற்கனவே காணும் பொங்கலன்று மட்டும் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது 3 நாட்களுக்கு தடை விதிப்பு.

------

Today News செய்திகள் 03.04.2021 | TPC

Today News 03.04.2021 | TPC Providing Latest Breaking Updated Tamil News - தினமும் நியூஸ் உங்களுக்காக from Tamil Party Club - TPC மும்பை ...