Thursday, January 7, 2021

Today News செய்திகள் 07.01.2021 | TPC

Today News 07.01.2021 | TPC

சட்டவிரோத ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஜனநாயக வழிமுறையை தகர்க்க அனுமதிக்க முடியாது.



அமெரிக்காவில் டிரம்ப் ஆதரவாளர்களின் அத்துமீறல் குறித்து பிரதமர் மோடி கருத்து. 

வாஷிங்டனில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் மன உளைச்சல் அளிக்கிறது - பிரதமர் மோடி.

"வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டு நடத்திய வன்முறை நாட்டுக்கே அவமானம்" – ஒபாமா.

------

கடந்த ஞாயிறு அன்று நடந்த குரூப் 1 தேர்வுக்கான உத்தேச பதில்கள் டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் வெளியீடு - விடைகள் பற்றி ஆட்சேபம் இருந்தால் ஜனவரி 14க்குள் தெரிவிக்கலாம் என்றும் அறிவிப்பு.

------

பொங்கலுக்கு பிறகு பள்ளிகளை திறப்பது குறித்த பெற்றோர்களின் கருத்துகளை அரசிடம் தாக்கல் செய்தது பள்ளிக்கல்வித்துறை.

பொங்கலுக்கு பிறகு பள்ளிகளை திறக்க 95% பெற்றோர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன.18ல் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல்.

------

பிரேசிலைச் சேர்ந்த கால்பந்து வீரர் அலெக்ஸ் அபோலினிரியோ மாரடைப்பால் காலமானார்.

------

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்  விமானத்தின் உட்புறங்களை சுத்தம் மற்றும் கிருமி நீக்கம் செய்வதற்காக  ரோபோ தொழில்நுட்பத்தை  இந்தியாவில் முதன்முறையாக அறிமுகப்படுத்துகிறது.

------

ஜனவரி 27ம் தேதி விடுதலையாக வாய்ப்பு என சசிகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல்.

------

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான அனுமதியை தமிழக அரசு திரும்ப பெற பீட்டா அமைப்பு வலியுறுத்தல்

போட்டிகளை நிறுத்தாவிட்டால் ஜல்லிக்கட்டால் மட்டுமன்றி கொரோனா காரணமாகவும் மக்கள் உயிரிழக்க வாய்ப்பு உள்ளதாக பீட்டா அமைப்பு தகவல்.

------

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மருத்துவமனையில் அனுமதி

நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதி என தகவல்.

------

நாடு முழுவதும் JEE-ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு ஜூலை 3ம் தேதி நடைபெறும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு

------

சசிகலா குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி உதயநிதிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார் திவாகரன் மகன் ஜெய் ஆனந்த்.

------

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜையையொட்டி பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கி உள்ளது.

------

மகாராஷ்டிர மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு ரத்து

இதே போன்று இமாச்சலப் பிரதேச அரசும் நான்கு மாவட்டங்களுக்கு அறிவித்திருந்த இரவு நேர ஊரடங்கு திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளது.

------

நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கங்குலி இன்று டிஸ்சார்ஜ்.

------

லஞ்சம் பெற்ற திண்டுக்கல் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக உதவி இயக்குனர் முத்துகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். 

புதிதாக மனைப்பிரிக்க அனுமதி வழங்க ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கும் போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

------

தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில் பணியாளர்களுக்கு ரூ.1000 பொங்கல் போனஸ் -இந்து அறநிலையத்துறை அறிவிப்பு

------

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி : முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் சேர்த்தது.

ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக புகோவ்ஸ்கி 62 ரன்களும், மார்னஸ் 67 ரன்களும் எடுத்தனர்.

------

குமரிக்கடல் முதல் வடதமிழக பகுதிகள் வரை வளிமண்டல சுழற்சி நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

இதன் காரணமாகவும், கிழக்கு திசை காற்று காரணமாகவும் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

------

Tuesday, January 5, 2021

Today News செய்திகள் 05.01.2021 | TPC

Today News 05.01.2021 | TPC

தை பூச நாள் - இனி அரசு விடுமுறை தினம்.




தமிழகத்தில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு வரும் 28ம் தேதி பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவு.

இனிவரும் ஆண்டுகளில் அனைத்து தைப்பூச திருவிழாவையும் பொதுவிடுமுறை பட்டியலில் சேர்த்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு.

------

10,11,12 ம் வகுப்பு மாணவ, மாணவிகள் பொது தேர்வுகளை எதிர்கொள்ள பள்ளிகளை திறக்க திட்டம்.

பள்ளிகள் திறப்பது குறித்து நாளையே கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

------

தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளை ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிக்க அனுமதிக்க கூடாது-தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்.

நீர் நிலைகள் ஆக்கிரமிப்பால் மனித இனமே அழிந்து போகும் - தலைமை நீதிபதி அமர்வு வேதனை.

------

எம்.பி. - எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளின் விசாரணையை துரிதப்படுத்த வேண்டும்- சிறப்பு நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்.

------

மேற்கு வங்கத்தில் இளைஞர் நலத்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் லக்ஷ்மி ரத்தன் சுக்லா ராஜினாமா செய்து உள்ளதால் மம்தா பேனர்ஜி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.

------

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, புதுச்சேரி மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு.

------

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று

தமிழகத்தில் இதுவரை மொத்தம் 4 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

------

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து 41 நாட்களாக விவசாயிகள் போராட்டம் குறித்தும் கொரோனா தடுப்பூசி உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளது

------

மினி கிளினிக்குகளுக்கு மருத்துவ பணியாளர்களை நியமிக்கும் விவகாரத்தில் தற்போதைய நிலை தொடர உயர்நீதிமன்றம் உத்தரவு

------

சென்னையில் தொடர் மழை காரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளுக்குச் செல்லும் 9 விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.

------

இந்திய குடியரசு தின சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், உருமாற்றம் பெற்ற கொரோனா பரவலால், இந்திய சுற்றுப்பயணத்தை தள்ளிவைத்துள்ளதாக தகவல்.

------

இந்தியாவில் வரும் 13-ம் தேதி (ஜன) - முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் - மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு

சென்னை, மும்பை, கொல்கத்தா, கர்னால் உள்ளிட்ட இடங்களில் மிகப்பெரிய தடுப்பூசி சேமிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன

------

தமிழகம் முழுவதும் வரும் 15, 26, 28 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

திருவள்ளுவர் தினம், குடியரசு தினம் மற்றும் வடலூர் ராமலிங்கர் நினைவு தினத்தை முன்னிட்டு விடுமுறை அறிவிப்பு.

------

வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் யோசனைக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மதம்.

------

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் கோமுகி அணையின் நீர் மட்டம் - 46 அடி; நீர் இருப்பு - 45.80 அடியாக உள்ளது.

------

கேரளாவின் ஆலப்புழா, கோட்டயத்தில் பரவிய பறவைக் காய்ச்சல் தமிழகத்துக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை.

பறவைக் காய்ச்சலால் கேரளாவில் இருந்து கோழி, வாத்து உள்ளிட்டவைகளை தமிழகம் கொண்டு வர தடைவிதிப்பு.

------

Monday, January 4, 2021

Today News செய்திகள் 04.01.2021 | TPC

Today News 04.01.2021 | TPC


அசாமில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் மாணவிகள் பள்ளிக்கு வரும் ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு ரூ.100 



உதவித்தொகை வழங்கப்படும் என்று மாநில கல்வி அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவிச்சிருக்கார்.

------

புதுச்சேரியில் ஜனவரி 6-ம் தேதி முதல் தொழில்நுட்பக் கல்லூரிகளை திறக்க உயர்க்கல்வித்துறை உத்தரவு.

------

தமிழ்நாடு கொரோனா இன்றைய நிலவரம் 04.01.21

838 புதுத் தொற்றாளிகள்

இதில் 229 சென்னைவாசிகள். 

60,174 பேர்களுக்கு  டெஸ்ட் எடுக்கப்பட்டது.

------

ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமானவரி நிலுவை எவ்வளவு? பதில் மனு தாக்கல் செய்ய வருமான வரித் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

------

அடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்.

------

10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது பற்றி ஜனவரி 8 வரை கருத்தக் கேட்பு கூட்டம் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. 10, 12 வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வை எதிர்கொள்வது என்பது இன்றியமையாததாகும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோர் ஆசிரிய் கழக உறுப்பினர் கள், பெற்றோரை அழைத்து கருத்து கேட்க வேண்டும் என கூறியுள்ளது.

------

திரையரங்குகளில் 100% இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி:

100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட இந்த பொங்கல் முதல் அனுமதி அளித்ததற்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் எங்களின் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அனுமதிக்கு உறுதுணையாக இருந்த மாண்புமிகு அமைச்சர் திரு. கடம்பூர் ராஜூ அவர்களுக்கும் எங்கள் நன்றிகள்.

------

டெல்லியில் தமிழ் அகாடமி அமைக்கும் முதல்வர் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

கலாசார பிணைப்புகளை மேம்படுத்தவும், தமிழ் பாரம்பரியத்தை வெளிக்காட்டவும் இது உதவும்- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

------

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.536 உயர்ந்து ரூ.38,520க்கு விற்பனை.

கிராமுக்கு ரூ.67 உயர்ந்து ரூ.4,815க்கு விற்பனை.

------

அரசியல் சண்டைகளை நீதிமன்றத்துக்கு கொண்டு வருவது ஏன்?

அரசியல் சண்டையை அரசியல் ரீதியில் சந்திக்க வேண்டும்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி 

சஞ்ஜிப் பானர்ஜி கேள்வி.

------

கடும் பனிப்பொழிவு காரணமாக, ஜம்மு - காஷ்மீரில், உதம்பூர் - ஸ்ரீநகர் இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

வடமாநிலங்களில் குளிர் வாட்டி வரும் நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்திலும் கடும் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது.

------

திருப்பதி ஏழுமலையான் கோவில் வைகுண்ட ஏகாதசி நிகழ்வில் ரூ.29.06 கோடி உண்டியல் காணிக்கை வசூல்

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கடந்த 25ம் தேதி முதல் நேற்று வரை 4.25 லட்சம் பேர் சாமி தரிசனம்

------

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகள் 60 பேர் மரணம்.

கடுமையான குளிரை தாங்க முடியாமல் 60 விவசாயிகள் உயிரிழப்பு.

விவசாயிகள் மரணம் குறித்து பாரதிய கிஷான் சங்கம் அறிவிப்பு.

------

காவல்துறை எச்சரிக்கை!

கொரோனா தடுப்பூசிக்காக ஆதார் எண்ணை அளிக்க கோரி அழைப்பு வந்தால் பொதுமக்கள் நம்ப வேண்டாம். அரசு அதிகாரிகள் பேசுவதாக போனில் அழைத்து¸ ஆதார் எண்ணை அளிக்க கோரி¸ பின் உங்கள் மொபைல் எண்ணிற்கு ஓ.டி.பி (OTP) வரும் என்று கூறி நமது விவரங்கள்¸ வங்கித் தொகை ஆகியவற்றை திருடுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு தமிழ்நாடு காவல்துறை கேட்டுகொள்கிறது.

------

KGF Chapter II Movie Teaser :-

ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிக்கும் கேஜிஎஃப் சேப்டர் 2 திரைப்படத்தின் டீஸர் வரும் ஜனவரி 8-ல் வெளியாகவிருக்கிறது. ராக்கிங் ஸ்டார் யாஷ்-ன் பிறந்தநாளை ஒட்டி ஜனவரி 8 2021, காலை 10.18 மணியளவில் கேஜிஎஃப் சேப்டர் 2-வின் டீஸர் வெளியிடப்படுகிறது. ஹோம்பாலே யூடியூப் சேனலில் டீஸர் வெளியிடப்படுகிறது.

------

Saturday, January 2, 2021

Today News செய்திகள் 02.01.2021 | TPC

Today News 02.01.2021 | TPC


அஜித், தனுஷ், ஜோதிகாவிற்கு 2020-ம் ஆண்டிற்கான தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு.


தாதா சாகேப் பால்கே விருது பெறும் அஜித், ஜோதிகா உள்பட திரையுலகினருக்கு டிடிவி தினகரன் வாழ்த்து

------

வார நாட்களில் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை கூடுதல் மின்சார ரயில் சேவை - தெற்கு ரயில்வே  அறிவிப்பு.

------

கர்நாடகாவில் ஹோட்டல்கள் வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் 24 மணி நேரமும் திறக்க அரசு அனுமதி.

பெண் ஊழியர்களை இரவு 8 மணிக்கு மேல் பணி செய்ய அனுமதிக்கக்கூடாது- கர்நாடக அரசு.

ஒரு ஊழியருக்கு 8 மணி நேரம் மட்டும் பணி, கூடுதலாக 2 மணி நேரம் பணி வழங்கலாம்.

------

நிவர், புரெவி புயலால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு இடு பொருள் நிவாரணம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

புயலால் பயிர் இழப்பை சந்தித்த விவசாயிகளுக்கு ரூ.600 கோடி இடு பொருள் நிவாரணம் வழங்க உத்தரவு.

வருகிற 7 ஆம் தேதி முதல் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும்.

------

சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டது.  

இந்தியாவில் மட்டுமே கொரோனாவுக்கு எதிரான 4 தடுப்பூசிகள் தயாராக உள்ளது.

ஜனவரி 15-ம் தேதி முதல் கொரோனாவுக்கு எதிரான கோவிஷீல்டு தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.

------

ஆஸ்திரேலியாவில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக ரோகித் சர்மா உள்பட 5 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். 

ரோகித் சர்மா, ஷிப்மன் கில், ரிஷப் பந்த், பிருத்வி ஷா, நவ்தீப் சைனி ஆகிய வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

------

ரூ 1750க்கு ஸ்மார்ட் போன் எனக் கூறி பவர் பேங்க் அனுப்பும் மோசடி.

தொலைபேசியில் தொடர்புகொள்ளும் மர்ம நபர்கள் கோவிட் 19 காரணமாக தங்கள் நிறுவன ஸ்மார்ட் போன்களை ரூ 1750க்கு நேரடி விற்பனை செய்வதாகவும், தபால்கார ரிடம் பொருளை பெற்றுக் கொண்டு பணம் அளித்தால் போதும் எனக்கூறி டுபாக்கூர் பவர்பேங்க் அனுப்பி மோசடி செய்வது அதிகரித்துள்ளது. 

கவனம் மக்களே!

------

இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு, வரும் 6 ஆம் தேதி முதல் விமான சேவை தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு.

பிரிட்டனில் இருந்து இந்தியாவிற்கு வரும் 8 ஆம் தேதி முதல் விமான சேவை தொடங்கப்படும்.

------

பாஜக தலைமை வாய்ப்பளித்தால், எந்த தொகுதியிலும் போட்டியிட தயார் - குஷ்பு

தன்னை எதிர்த்து போட்டியிட தயாரா? - உதயநிதி ஸ்டாலினுக்கு குஷ்பு சவால்

2021 சட்டபை தேர்தலில் எனக்கு எதிராக போட்டியிட உதயநிதி ஸ்டாலின் தயாரா : குஷ்பு கேள்வி!

------

பலத்த மழையால் 5,263 கன அடி நீர்வரத்து: பாபநாசம் அணை மீண்டும் நிரம்பியது.

------

ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லையில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி துப்பாக்கிச்சூடு

காஷ்மீர் : புல்வாமா பகுதியில் தீவிரவாதிகள் கையெறி குண்டு தாக்குதல் - பொதுமக்கள் 7 பேர் காயம்.

------

வரும் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி - கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமிக்கு முழு ஆதரவு - தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்

------

“டெல்லி மட்டும் அல்ல, நாடு முழுவதும் மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும்” - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்

------

டிஎன்பிஎஸ்சி.யின் குருப்-1 முதல்நிலை தேர்வு நாளை நடக்கிறது : 66 காலியிடங்களுக்கு 2 லட்சம் பேர் போட்டி

------

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்ந்து ரூ.37,984-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.13 உயர்ந்து ரூ.4,748-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 130 காசு குறைந்து ரூ.72-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

------

Today News செய்திகள் 01.01.2021 | TPC

Today News 01.01.2021 | TPC


புதிய நம்பிக்கை, புதிய எதிர்பார்ப்புகளுடன் பிறந்துள்ளது 2021 புத்தாண்டு!

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்:



புதிய நம்பிக்கை, புதிய எதிர்பார்ப்புகளுடன் 2021ம் ஆண்டு பிறந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மக்கள் புத்தாண்டை உற்சாகமாக வரவேற்று மகிழ்ந்தனர். 

------

கர்நாடகாவின் முதல் பெண் உள்துறை செயலாளரான ஐ.பி.எஸ் அதிகாரி டி.ரூபா, வியாழக்கிழமை கர்நாடக மாநில கைவினைப்பொருட்கள் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டார். வெள்ளிக்கிழமை, அவர் புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்டார். கர்நாடகாவின் மற்றொரு ஐ.பி.எஸ் அதிகாரி ஹேமந்த் நிம்பால்கருடன் ஏற்பட்ட பகிரங்கமான மோதலுக்கு மத்தியில் இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

------

தஞ்சாவூரில் ஆதரவற்ற குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் தனது குடும்பத்துடன் சேர்ந்து இன்று புத்தாண்டைக் கொண்டாடினார்.

தஞ்சாவூரில் சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் அன்னை சத்யா குழந்தைகள் இல்லம் (பெண்கள்), அரசினர் குழந்தைகள் இல்லம் (ஆண்கள்) இயங்கி வருகின்றன. இதில், அன்னை சத்யா குழந்தைகள் இல்லத்தில் 21 ஆதரவற்ற பெண் குழந்தைகளும், அரசினர் குழந்தைகள் இல்லத்தில் 48 ஆதரவற்ற ஆண் குழந்தைகளும் உள்ளனர்.

------

ஆக்ஸ்போர்டு மற்றும் அஸ்ட்ராசெனகா தயாரித்துள்ள கோவிஷீல்டு தடுப்பூசிக்கு இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் அனுமதி தந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

------

தமிழகத்தில் இன்று புதிதாக 921 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,18,935 ஆக அதிகரித்துள்ளது.

------

சென்னை மாநகரம் முழுவதும் இளையராஜா ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

------

வட இந்தியாவில் கடும் குளிர் வாட்டி வரும் நிலையில், வரும் 3ம் தேதி முதல் வெப்பநிலை 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என இந்திய வானிலை மையம் அறிவிப்பு

------

கேரளாவில் வரும் 5ம் தேதி முதல் தியேட்டர்களை திறக்க மாநில அரசு அனுமதி; 50% இருக்கைகள், முகக்கவசம், தனி மனித இடைவெளி என கட்டுப்பாடுகள் விதிப்பு  - முதல்வர் பினராயி விஜயன்

------

கர்நாடகாவில் 8 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பள்ளிகள் திறப்பு.

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்கம்.

------

சென்னையில் பெட்ரோல்- டீசல் விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 86.51 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 79.21 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

------

Wednesday, December 30, 2020

Today News செய்திகள் 30.12.2020 | TPC

Today News 30.12.2020 | TPC


வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நீட்டிப்பு.



நாளையுடன் முடியவிருந்த நிலையில் பிப்.28 ஆம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்தது மத்திய நிதியமைச்சகம்.

-----

இஸ்ரோ தலைவர் சிவனின் பதவிக்காலம் நீட்டிப்பு:

இஸ்ரோ தலைவர் சிவனின் பதவி காலம் மேலும் ஓராண்டு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

2022 ஜனவரி 14-ம் தேதி வரை பதவி காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இஸ்ரோ தலைவராக தமிழகத்தை சேர்ந்த கே.சிவன் கடந்த 2018 ஜனவரி 15-ம் தேதி நியமிக்கப்பட்டார்.

-----

அரசுக்கு எதிராக அவதூறு பரப்பி ஆதாயம் தேட முயற்சிப்பதாக ஸ்டாலின் மீது முதலமைச்சர் பழனிசாமி குற்றச்சாட்டு.

உண்மை தான் வெல்லும், ஸ்டாலினின் பொய் அறிக்கை எடுபடாது - முதலமைச்சர் பழனிசாமி.

அதிமுகவில் சாமானியர் கூட முதல்வராக முடியும்.

புயலை விட வேகமாக செயல்பட்டு, சாதித்து காட்டியது அதிமுக அரசு.

தமிழகம் முழுவதும் சென்று ஆய்வு பணி மேற்கொண்டதால் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டது -திருச்சி அதிமுக தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேச்சு.

-----

தமது சொந்த ஊரான, பரமக்குடியில் மக்கள் நீதி மைய கட்சி தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம்:

ஏழ்மைக்கு எதிரான குரல் என்னுடையது அந்த குரல் உங்களுடன் இணையும்.

மக்கள் நீதி மய்யத்தின் ஆயுதமான நேர்மையை கையில் எடுத்தால் எதிரில் நின்று பேச யாரும் இருக்கமாட்டார்கள் - கமல்.

-----

மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

மண்டல பூஜையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த நவம்பர் மாதம் 15-ந் தேதி திறக்கப்பட்டது. 

41 நாட்கள் சிறப்பு வழிபாடுகளுக்கு பிறகு கடந்த 26-ந் தேதி நடை அடைக்கப்பட்டது.

இந்தநிலையில் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 

இன்றைய தினம் சாமி தரிசனத்திற்கு பக்தர்ளுக்கு அனுமதி கிடையாது.

நாளை முதல் தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். 

மகர விளக்கு பூஜை ஜனவரி 14-ந் தேதி நடைபெறுகிறது. அதை தொடர்ந்து 19-ந் தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

-----

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் மத்திய அரசு 6 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நிறைவு.

பேச்சுவார்த்தையில் விவசாயிகளின் இரு கோரிக்கைகள் ஏற்பு என மத்திய வேளாண் அமைச்சர் தகவல்.

அடுத்த கட்ட பேச்சுவார்த்தை ஜனவரி 4 ஆம் தேதி நடைபெறுமென அறிவிப்பு.

-----

அரசு வழங்கும் அதிகாரப்பூர்வ டோக்கன்களுக்கு மட்டும் பொங்கல் பரிசு வழங்கப்படும் -சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உத்தரவாதம்.

அரசு வழங்கும் அதிகாரப்பூர்வ டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு என நாளை மாலை 5 மணிக்குள் சுற்றறிக்கை வெளியிட வேண்டும் - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.

கூட்டுறவு மற்றும் உணவு வழங்கல் துறை வழங்கும் அதிகாரப்பூர்வ டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என சுற்றறிக்கை வெளியிடப்படும் எனவும் தமிழக அரசு உறுதி.

-----

TNPSC- தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு இன்று  (30.12.2020) முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

குரூப் 1 தேர்வு.

விடை தெரியாத கேள்விகளுக்கு "E" கட்டத்தில் Shade செய்ய வேண்டும்.

விடைத்தாளில் கைரேகை கட்டாயம்.

இரு இடங்களில் கையெழுத்தும் இட வேண்டும்.

-----

கோவை மாவட்டம் அப்பநாயக்கன்பாளையம் கிராமத்தில் வேப்ப மரத்திற்கும், அரச மரத்திற்கும் வேத மந்திரங்கள் முழங்க திருமணம். மரங்களுக்கு வேட்டி, சேலை அணிவித்து தாலி கட்டி நடத்தபட்ட  திருமணத்தில் ஏராளமானோர் பங்கேற்பு.

-----

தமிழகத்தில் 75 80% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்க தமிழக அரசு அனுமதி வழங்க வாய்ப்பு.

100% இருக்கைக்கு முதல்வரிடம் விஜய் கோரிக்கை வைத்தார்.

-----

திருச்சி அருகே முசிறி-நாமக்கல் இடையே நான்கு வழி சாலை அமைக்கப்படும் - முதல்வர் பழனிசாமி

-----

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் நியூசிலாந்து அணி முதலிடத்திற்கு முன்னேறியது

-----

SSC CGL 2020 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு ;  ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

-----

"நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆவது, சினிமா ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தி" - நடிகர் தனுஷ்

-----

ஸ்ரீரங்கம் அரங்கநாத அவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதசி பெருவிழா இராப்பத்து 6ம் நாள் ஸ்ரீ நம்பெருமாள் கிருஷ்ணர் கொண்டை, 



இரத்தின காது காப்பு, வைர அபயஹஸ்தம், மஹாலக்ஷ்மி பதக்கம், காசு மாலை மற்றும் திருஆபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

-----

சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிப்பு.

சரக்கு விமானங்களின் சேவை வழக்கம் போல் தொடரும்.

விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவிப்பு.

-----

சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி முதல்வரின் தனிப்பிரிவில் தாயார் மனு.

கோட்டாட்சியரின் விசாரணை அறிக்கை காவல்துறையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் தாயார் விஜயா கோரிக்கை.

-----

நட்சத்திர ஓட்டல்கள் உட்பட அனைத்துவித உணவகங்களும் இரவு 10 மணிக்கு மேல் செயல்பட அனுமதி இல்லை - சென்னை காவல்துறை.

--

புத்தாண்டையொட்டி நாளை மற்றும் நாளை மறுநாள் திருச்செந்தூர் கடற்கரையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடற்கரைக்கு செல்லவோ கடலில் குளிக்கவோ பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

-----

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து ரூ.37,800 க்கு விற்பனை.

-----

கோவிட்-19 தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை அமெரிக்க துணை அதிபாராக தேர்வு செய்யப்பட்டுள்ள திருமதி கமலா ஹாரிஸ் போட்டுக்கொண்டார்.

தடுப்பூசி குறித்து மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சிகளில் நேரலை செய்யப்பட்டது.

-----

Tuesday, December 29, 2020

Today News செய்திகள் 28.12.2020 | TPC

Today News 28.12.2020 | TPC

ஏ.ஆர்.ரகுமானின் தாயார் காலமானார்:

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் தாயார் கரீமா பேகம் உடல்நலக் குறைவால் காலமானார்.

ஓராண்டுக்கும் மேலாக உடல்நலம் குன்றி இருந்த கரீமா பேகம்,  இன்று காலை உயிரிழந்தார். 2020ல் எத்தனையோ இழப்புகள்... ஏ.ஆர்.ரகுமானுக்கு இது பேரிழப்பு.

தன் பேட்டிகளிலும், மேடை பேச்சுகளிலும், தன் தாய் குறித்து ஏதேனும் ஒரு இடத்தில் பேசி விடுவார் ஏ.ஆர்.ரகுமான்.

-----

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் அனைத்து விதமான வெங்காயத்தையும் ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

-----

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 1.19 கோடி பணம், 1.8 கிலோ தங்கம், 5.2 கிலோ வெள்ளி ஆகியவை உண்டியல் காணிக்கையாக கிடைக்கப் பெற்றுள்ளன - கோவில் நிர்வாகம்.

-----

கூகுள், ஆப்பிள் நெட்பிளிக்ஸ் நிறுவனங்களில் வேலை கிடைக்க திறமை இருந்தால் போதும், பட்டப்படிப்பு அவசியமில்லை - லிங்க்டுஇன் ஆய்வு

-----

ஒன் எலக்ட்ரிக் நிறுவனம் மின்சாரத்தில் இயங்கும் KRIDN இருசக்கர வாகனங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கத் தொடங்கியுள்ளது.

இந்த பைக் அதிகப்பட்சமாக மணிக்கு 95 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் திறனுள்ளது. விலை ஒரு லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் ஆகும். இதன் பேட்டரியை ஒரு முறை முழுவதும் சார்ஜ் செய்தால் வண்டி 80 முதல் 110 கிலோமீட்டர் வரை ஓடும்.

இந்த வாகனங்களை வழங்கும் பணி ஐதராபாத்திலும் பெங்களூரிலும் தொடங்கியுள்ளது. தமிழகத்திலும் கேரளத்திலும் வாகனங்களை வழங்கும் பணி ஜனவரியில் தொடங்குகிறது. 

-----

"வெற்றிநடைபோடும் தமிழகம்" என்ற தலைப்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி அடுத்த 3 நாட்களுக்கு

நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டங்களில் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், குமாரபாளையம், பரமத்தி வேலூர், 

துறையூர், மண்ணச்சநல்லூர், லால்குடி, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட ஊர்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார் - அதிமுக தலைமை கழகம்.

-----

தமிழ்நாட்டில், புதிதாக 1,005 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்ற 1,074 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

பெருந்தொற்று பாதிப்பால் 11 பேர் உயிரிழந்தனர். 6 மாவட்டங்களில் மட்டுமே கொரோனா உயிரிழப்பு பதிவாகி உள்ளது. பெரம்பலூர், மீண்டும் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது .

சென்னையில் 285 பேர், புதிதாக, கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 மாவட்டங்களில், ஒற்றை இலக்கத்தில் வைரஸ் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. தமிழகம் முழுவதும் 8 ஆயிரத்து 867 பேர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

-----

தமிழகத்தில் 50% இருக்கைகளுடன் டாஸ்மாக் பார்களை திறக்க  அனுமதி; பார்களில் வெப்ப பரிசோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்க வேண்டும்! - தமிழக அரசு.

உள்ளே செல்ல மற்றும் வெளியே வர என பார்களில் இரண்டு வழிகள் ஏற்படுத்த வேண்டும், முகக்கவசம் கட்டாயம், சானிடைசர், வெப்ப பரிசோதனை என பல்வேறு நிபந்தனைகள் வெளியீடு

-----

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிப்பு.

டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிப்பு.

- மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

-----

மயிலாடுதுறையில் பழைய இரும்பு கடையில் இருந்து கட்டு கட்டாக புதிய பாட புத்தகங்கள் பறிமுதல். 

இரும்பு கடை வியாபாரி கைது - மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை.

-----

ஜனவரி 13ம் தேதி மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியாகிறது - திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சக்தி சுப்பிரமணியம்.

கொரோனா பாதிப்புக்கு பின் வெளியாகும் மிகப்பெரிய படம் இது.

முதல்வருடன் நடிகர் விஜய் சந்திப்பு -மாஸ்டர் படத்துக்கு 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்கக் கோரிக்கை.

-----

பாக்ஸிங் டே டெஸ்ட் : 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 133 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறல்.

ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக வேட் 40, மர்னஸ் 28 ரன்கள் சேர்ப்பு.

2வது இன்னிங்சில் இந்திய அணி 326 ரன்கள் சேர்த்தனர்.

-----

மக்கள் நீதி மய்யம் கூட்டணி குறித்து ஜனவரியில் முடிவெடுக்கப்படும் - ரஜினிகாந்துக்கு முதலில் உடல்நலம்தான் முக்கியம். பின்னர்தான் அரசியல் தொடர்பான பணிகளை தொடர்வார் என நம்புகிறேன்.

பிறப்பு சான்று முதல் இறப்பு சான்று வரை அனைத்தையும் பெற தமிழகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

- கமல்.

-----

டெல்லியில் தானியங்கி மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்டோர் பங்கேற்பு.

-----

யாரேனும் உங்களை தொடர்புகொண்டு தவறுதலாக அல்லது அதிகமாக பணம் அனுப்பிவிட்டதாகவும் எனவே பணத்தை திருப்பி அனுப்புமாறு கூறினால் போலியாக அனுப்பப்படும் SMS களை மட்டும்  பார்த்து ஏமாற வேண்டாம். உங்கள் வங்கி கணக்கை பரிசோதித்து கொள்ளவும்.

-----

சொந்த வாகனத்தை, வாகனம் யார் பெயரில் உள்ளதோ அவர்கள் குடும்பத்தார்களை தவிர, அதாவது தாய் தந்தையர், பிள்ளைகள், சகோதர சகோதரிகளைத் தவிர யார் எடுத்துச் சென்றாலும் கிரிமினல் குற்றம்.

- கேரள போலீஸ்!

-----

தமிழகத்தில் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி தொடங்கிவைத்தார்.

நாகையில் இருந்து பிரித்து மயிலாடுதுறை மாவட்டத்தை உருவாக்க கடந்த ஏப்ரலில் அரசாணை வெளியிடப்பட்டது.

-----

Today News செய்திகள் 03.04.2021 | TPC

Today News 03.04.2021 | TPC Providing Latest Breaking Updated Tamil News - தினமும் நியூஸ் உங்களுக்காக from Tamil Party Club - TPC மும்பை ...