Monday, February 8, 2021

Today News செய்திகள் 08.02.2021 | TPC

 Today News 08.02.2021 | TPC

சாமோலியில் பனிப்பாறை வெடித்ததைத் தொடர்ந்து உத்தர்கண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் பேரிடர் நிவாரண நடவடிக்கை குறித்து மறுஆய்வுக் கூட்டத்தை நடத்துகிறார்.


 

நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக மாநில பேரிடர் மறுமொழி நிதியிலிருந்து ரூ .20 கோடியை உத்திரகாண்ட் முதல்வர் விடுத்துள்ளார்.

--


உத்தரகாண்ட்- அலக்நந்தா, தவுலிகங்கா நதிகளில் பனிப்பாறை உடைந்து உண்டான வெள்ளத்தால் பலர் உயிரிழந்துள்ள துயரச்செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தோர் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்!

உத்தரகாண்ட் மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது. - முதல்வர் பழனிசாமி.

------


ரபேல் போர் விமானத்தை இந்திய விமானப்படையில் சேர்க்க நடத்தப்பட்ட நிகழ்ச்சிக்கு ஆன செலவு 41.32 லட்ச ரூபாய்.  இதில் ஜி.எஸ்.டி 9.18 லட்ச ரூபாய்.

------


தமிழகத்தில் கொரோனா இன்றைய நிலவரம் 08.01.2021.

464 புதுத் தொற்றாளிகள்.

இதில் 143 சென்னைவாசிகள்.

51,448 பேர்களுக்கு டெஸ்ட் எடுக்கப்பட்டது.

------


அண்ணாத்த திரைப்படம் நவம்பர் 4ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய படப்பிடிப்பு இம்மாத இறுதியிலோ அல்லது மார்ச் தொடக்கத்தில் தொடங்கும் என கூறப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து ரஜினிகாந்த் நடிக்க திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்ததாக மீண்டும் கார்த்திக் சுப்புராஜுடன் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

------


துபாய், சார்ஜாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.49 லட்சம் மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. துபாய் மற்றும் சார்ஜாவில் இருந்து வந்த 2 பயணிகளிடம் இருந்து 1090 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

------


ஆந்திராவில் லஞ்ச புகாரில் ஜூனியர் இன்ஜினியர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் புகார்தாரரிடமிருந்து ரூ .32,000 லஞ்சமாக பெற்றபோது ராணுவ பொறியாளர் சேவைகள் ஜூனியர் இன்ஜினியர் மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

------


சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று விடுதலையாகி சசிகலா தமிழகம் வருகை:

1.    சசிகலாவின் வாகனம் சென்னையை நோக்கி வருவதால் சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று விடுதலையாகி சசிகலா தமிழகம் வருவதால் நெடுஞ்சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் ஒரு புறம் மட்டுமே வாகனங்கள் சென்று வருகின்றனர்.

2.      கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் பகுதியில் சசிகலா வாகனத்துடன் ஆதரவாளர்கள் வாகனங்களில் செல்ல போலீஸ் தடை விதித்துள்ளனர். வாகனம் செல்ல தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து சசிகலா ஆதரவாளர்கள் போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

3.      ஒற்றுமையோடு இனைந்து செயல்பட வேண்டும் என வாணியம்பாடியில் சசிகலா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். தமிழக மக்களுக்கு நான் என்றும் அடிமை, அடக்குமுறைக்கு அடிப்பணிய மாட்டேன் என கூறினார். எம்.ஜி.ஆர். வழிவந்த ஒருதாய் வயிற்று பிள்ளைகள் ஒற்றுமையாக ஓரணியிர் திரள வேண்டும் என கூறினார். தொடர்ந்து தீவிர அரசியலில் ஈடுபடுவேன் எனவும் பேட்டியளித்தார்.

4.      பூந்தமல்லியில் சசிகலாவை வரவேற்க புறா அதிமுக கொடி வடிவில் வரையப்பட்டு பறக்கவிடப்பட இருக்கிறது.

5.      பெங்களூரில் இருந்து சென்னைக்கு 334கிமீ 8மணி நேர பயணத்தில்  131கிமீ கடந்துள்ளது.! சென்னை வந்தடைய இன்னும் 203கி.மீ கடக்க வேண்டும்.

6.      பெங்களுரிலிருந்து இன்று காலை 7.30 மணியளவில் சசிகலா தமிழகம் வந்து கொண்டிருக்கும் நிகழ்வை ஜெயா தொலைக்காட்சி காலை முதலே நேரலை செய்து வரும் நிலையில், தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஜெயா தொலைக்காட்சி ஒளிபரப்பை அரசு கேபிள் டிவி நிறுவனம் நிறுத்தியுள்ளது.

7.      சசிகலா-வுக்காக கிரேன் மூலம் பழ மாலை.

8.      வேலூரில் நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்க்கு விரைந்து வழிவிட்ட

சசிகலா தொண்டர்கள். வேலூர் வந்தடைந்தார் சசிகலா. ஆதரவாளர்கள் தொடர்ந்து உற்சாக வரவேற்பு.

9.      வேலூரில்  இருந்து ராணிப்பேட்டை நோக்கி வந்து கொண்டிருக்கிறார் சசிகலா

10.  சசிகலா இன்று சென்னை தி நகர் இல்லத்திற்கு வருவதற்கு இரவு 9 மணி ஆகிவிடும்.

------

Friday, February 5, 2021

Today News செய்திகள் 05.02.2021 | TPC

Today News 05.02.2021 | TPC 

16.43 லட்சம் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன் ரூ.12,110 கோடி தள்ளுபடி:



பயிர்க்கடன் தள்ளுபடிக்கான அரசாணை வெளியிடப்பட்டு, அதற்கான நிதி ஆதாரம் வரும் நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கப்படும் - சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

விதி எண் 110-ன் கீழ் சட்டப்பேரவையில் அறிவிப்பு.

------

கடன் தள்ளுபடி விவசாயிகளுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியையும், நல்ல எதிர்காலத்தையும் உருவாக்கும்.

விவசாய பயிர் கடன் தள்ளுபடி என்ற முதலமைச்சர் பழனிசாமியின் அறிவிப்புக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரவேற்பு.

------

200 தொகுதிகளுக்கு மேல் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும், 234 தொகுதியில் வெற்றி பெற்றாலும் ஆச்சர்யம் இல்லை - மு..ஸ்டாலின் பேட்டி.

திமுக ஆட்சிக்கு வந்ததும் 100 நாட்களில் மக்கள் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என மு..ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

------

உள்ளாட்சி அமைப்புகளில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தனி அலுவலர்களின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை நீட்டிப்பது குறித்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. பெண்கள், குழந்தைகள் மீதான குற்றங்களுக்கு தண்டனை அதிகரிப்பதற்கான மசோதாவும் நிறைவேற்றம் செய்யப்பட்டது.

------

கொல்கத்தா காவல்துறையில் நேதாஜி என்ற பெயரில் புதிய பட்டாலியன் பிரிவு உருவாக்கப்படும்.

மேற்குவங்க சட்டப்பேரவையில் முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு.

------

சென்னை பல்கலைக்கழக வகுப்புகள் தொடர்ந்து ஆன்லைன் முறையிலேயே நடைபெறும்.

ஜூன் மாதத்திற்கு பிறகு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும்.

சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு.

------

புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டைகள் விரைவு அஞ்சலில் அனுப்பப்படும் என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி திரு சத்தியப்பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

------

தமிழகத்தில் கொரோனா இன்றைய நிலவரம் 05.02.2021.

489 புதுத் தொற்றாளிகள்.

இதில் 158 பேர் சென்னைவாசிகள்.

52,487 பேர்களுக்கு டெஸ்ட் எடுக்கப்பட்டது.

------

ஆன்லைன் மூலம் ரூ.250 செலுத்தினால் பஞ்சாமிர்தத்துடன் கூடிய பழனி முருகன் கோவில் பிரசாதம் நம் இல்லம் தேடி வரும்.

------

ஜல்லிக்கட்டு தொடர்பாக போடப்பட்ட வழக்குகள் திரும்ப பெறப்படும் என்று முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

விரும்பத்தகாத நிகழ்வுகளான, காவல் துறையினரை தாக்கிய வழக்குகளை தவிர்த்த பிற வழக்குகள் வாபஸ்.

------

கொரோனா பாதிப்பால் கடந்த ஆண்டு கடைசி வாய்ப்பில் யு.பி.எஸ்.சி தேர்வை எழுதாமல் தவறவிட்டவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

------

அணையப் போகும் அரசாக அதிமுக அரசு உள்ளது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக என்ன சொன்னதோ, நான் என்ன சொல்கிறேனோ அதை அப்படியே முதல்வர் செய்து வருகிறார்.

------

அமேசான் ப்ரைம் வீடியோ மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் 2 படத்தின் முதல் போஸ்டரை வெளியிடுவதுடன் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு தேதியையும் அறிவிக்கிறது.

முதல் போஸ்டரை அமேசான் ப்ரைம் வீடியோ இன்று வெளியிட்டுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் வரும் பிப்.8, 2021 அன்று வெளியாகிறது.

------

திருவள்ளுவர் பல்கலைக்கழகம் இரண்டாகப் பிரித்து விழுப்புரத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் உருவாக்க பேரவையில் மசோதா நிறைவேற்றம்.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஜெயலலிதா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் கடலூர் பெரியார் கலைக்கல்லூரி, சிதம்பரம் அரசு கலைக்கல்லூரி, விருத்தாசலம் திருக்கொளஞ்சியப்பன் அரசு கலைக்கல்லூரி, விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரி ஆகியன வருகின்றன.

------

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் மகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் சென்னை சேத்துப்பட்டில் நாளை மாலை நடைபெற உள்ளது.

சிறப்பு விருந்தினர்களாக  எடப்பாடி மற்றும் பி எஸ் கலந்து கொள்கின்றனர்.

------

சிறையில் இருந்து விடுதலையான சசிகலா, பெங்களூரில் தன்னை தனிமைபடுத்திக்கொண்டுள்ளார். சசிகலா வருகின்ற எட்டாம் தேதி சென்னை வரவுள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை வரும் சசிகலாவிற்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க அவரது ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

------

வரும் 8ஆம் தேதி முதல் கல்லூரிகள் தொடங்க உள்ள நிலையில், கல்லூரிகளுக்கு இனி வாரத்தில் ஆறு நாட்கள் வேலை நாட்களாக அறிவித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

------

Today News செய்திகள் 03.04.2021 | TPC

Today News 03.04.2021 | TPC Providing Latest Breaking Updated Tamil News - தினமும் நியூஸ் உங்களுக்காக from Tamil Party Club - TPC மும்பை ...