Friday, February 21, 2025

Today News செய்திகள் 21.02.2025 | TPC

 Today News 21.02.2025 | TPC

Providing Latest Breaking Updated Tamil News - தினமும் நியூஸ் உங்களுக்காக from Tamil Party Club - TPC

"தமிழகத்தில் மே 1 முதல் புதிய மினி பேருந்துகள்"

"தமிழகத்தில் மே ஒன்றாம் தேதி முதல் புதிய மினி பேருந்துகள் இயக்கப்படும்"

புதிய மினி பேருந்துகளுக்கு வழித்தடம் ஏற்படுத்தினாலும், பயன்பாட்டில் உள்ள அரசு பேருந்துகளின் வழித்தடத்தில் மாற்றம் இல்லை - போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு.

------

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க அமைச்சர் பொன்முடி சென்றுள்ளார். அப்போது அவர் மீது சேறு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனர்.



இந்நிலையில் அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசிய வழக்கில் இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகி ராமகிருஷ்ணனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

------

தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைவு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து

ரூ.64,200 ரூபாயகவும், ஒரு கிராம் ரூ.8,025 ரூபாய்க்கு விற்பனை.

------

சுங்க அதிகாரிகளை 10 மணிநேரம் காக்க வைத்த பெண்!

சீனாவில் இருந்து டிரோன் கேமராக்கள் இறக்குமதி செய்த இரண்டு பேர் கைது செய்யப்பட்ட விவகாரம்...

புது வண்ணாரப்பேட்டையில் search வாரன்ட் உடன் வந்த சுங்க அதிகாரிகளை கண்டதும், வீட்டை உள்பக்கமாக பூட்டிக்கொண்ட பெண்...

பத்து மணி நேர காத்திருப்புக்கு பின் கதவை திறந்த நிலையில், அதிகாரிகள் சோதனை...

------

பெண்கள் பாதுகாப்பு - கெடுபிடி காட்டும் ரயில்வே!

ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் எதிரொலி

மகளிர் பெட்டிகளுக்கு அருகே சந்தேகத்திற்கு இடமாக பயணித்த, 900 பேர் மீது வழக்குப்பதிந்து ரயில்வே காவல்துறை விசாரணை.

------

போக்சோ வழக்கு!

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே, மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமியை வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய விவகாரம்...

ஒருவருக்கு ஆயுள் தண்டனையும், நான்கு பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து, போக்சோ சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு...

------

தனியார் பள்ளி ஆசிரியை கடத்தல்!

நெல்லை தச்சநல்லூரில் தனியார் பள்ளி ஆசிரியை காரில் கடத்தல்

செல்போன் கடை நடத்தி வரும் ராஜூ என்பவரை கைது செய்தது காவல்துறை

காதலை ஏற்க மறுத்ததால் காரில் கடத்திச் சென்றதாக போலீஸ் விசாரணையில் தகவல்

------

கிருஷ்ணகிரியில் போலீசாரை தாக்கி விட்டுத் தப்ப முயன்ற குற்றவாளியைத் துப்பாக்கிச் சூடு நடத்தி மடக்கிப்பிடித்த போலீஸ்.

தற்காப்புக்காக போலீசார் சுட்டதில் சுரேஷ் என்ற குற்றவாளிக்குக் காலில் காயம்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் ஆய்வு.

பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 4 இளைஞர்களில் ஏற்கனவே 2 பேர் கைது!

------

டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்த விவகாரம் குறித்த 285 சமூக ஊடக பதிவுகளை நீக்குமாறு மத்திய ரயில்வே அமைச்சகம் X (ட்விட்டர்) நிறுவனத்துக்கு உத்தரவு

அந்த பதிவுகள் அமைதியின்மையை ஏற்படுத்தக்கூடும் என்றும் ரயில் சேவைகளைப் பாதிக்கக்கூடும் என்றும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி

------

டிஜிட்டல் வழியாக பணத்தை பரிமாற்றம் செய்வதில் கூகுள் பே, போன் பே, பே டி.எம்., ஆகிய செயலிகள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளன. யுபிஐயில் இலவச பரிவர்த்தனைகளை அனுபவித்து வரும் கூகுள் பே பயனர்கள் இப்போது குறிப்பிட்ட பில் பேமெண்ட்டுகளுக்கு கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.



ஏற்கனவே ரீசார்ஜூக்கு ரூ.3 சேவை கட்டணமாக கூகுள் பே வசூலித்து வரும் நிலையில், மின்கட்டணம், கேஸ் கட்டணம் உள்ளிட்ட சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, பில் தொகையில் இருந்து 0.5 சதவீதம் முதல் 1 சதவீதம் வரையில் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.

------

சிறையில் கைதியை பார்க்க லஞ்சம் : வார்டன்கள் இரண்டு பேர் சஸ்பெண்ட்

தருமபுரி மாவட்ட சிறையில் கைதி பார்க்க லஞ்சம் வாங்கிய வார்டன்கள் இரண்டு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

தருமபுரியில் மாவட்ட சிறையில் 150க்கும் மேற்பட்ட கைதிகள் இருக்கின்றனர். இங்கு கைதிகளை பார்க்க வருவோரிடம் பணம் வசூலிக்கப்படுவதாக சிறை விஜிலன்ஸ் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது குறித்து நடத்திய விசாரணையில், மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வடமாநில இளைஞர்களை பார்க்கவந்த அவரது சகோதரரிடம் லஞ்சம் பெற்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து, சிறை வார்டனங்களான சவுந்தர்ராஜன் மற்றும் திருப்பதி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்

------

Saturday, April 3, 2021

Today News செய்திகள் 03.04.2021 | TPC

Today News 03.04.2021 | TPC

Providing Latest Breaking Updated Tamil News - தினமும் நியூஸ் உங்களுக்காக from Tamil Party Club - TPC



மும்பை மாநகரில் கடந்த 24 மணிநேரத்தில் 9 ஆயிரத்திற்கும் அதிகமாக புதிய கொரோனா பாதிப்பு - கொரோனா பெருந்தொற்று காலத்தில் இதுவே அதிகபட்ச தினசரி பாதிப்பு ஆகும்.

------

YouTube  இல் 5 கோடிக்கும் மேற்பட்டோர் ஸ்டாலின்தான் வராரு என்ற திமுகவின் தேர்தல் பிரச்சார பாடலை பார்த்துள்ளனர்.

------

சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழில் மூத்த மொழி பெயர்ப்பாளர் டாக்டர் ஹெச் பாலசுப்பிரமணியம் காலமானார்அவருக்கு வயது 90.

தொல்காப்பியத்தையும், பாரதியார் கவிதைகளையும் ஹிந்தியில் அவர் மொழி பெயர்த்துள்ளார்.

------

அந்தமான் கடல்பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழக்கிறது

------

பாம்பன் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு எண் 1 ஏற்றப்பட்டுள்ளது.

------

சத்தீஸ்கர் மாநிலம் பிஜாபூரில் மாவோயிஸ்டுகள் உடன் துப்பாக்கிச்சண்டை - பாதுகாப்பு படை வீரர்கள் 5 பேர் உயிரிழப்பு என தகவல்.

------

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரபல ரவுடி படப்பை குணா கைது.

------

தமிழகத்தில் கொரோனாவை தடுக்க கட்டுப்பாடுகள் தேவைக்கேற்ப தீவிரப்படுத்தப்படும்- தலைமை செயலர்.

 

தமிழகத்தில் கொரோனா நோய்தொற்றும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

 

இன்று வரை 54.78 லட்சம் தடுப்பூசிகள் மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு பெறப்பட்டுள்ளது -ராஜீவ் ரஞ்ஜன்.

------

நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரக்கூடிய நிலையில் வரும்14ம் தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறக் கூடிய ஆர்ஜித சேவையில் பக்தர்கள் பங்கேற்கும் முடிவு தற்காலிகமாக நிறுத்தம் - அறங்காவலர் குழு.

------

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஐசியூ-விலிருந்து சிறப்பு அறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக ராஷ்ட்ரபதி பவன் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.

இதனால் ஐசியூவில் இருந்த அவர், தற்போது அறுவை சிகிச்சைக்கு பின் சிறப்பு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தற்போது அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதாக தெரிவித்த மருத்துவர்கள், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஓய்வில் இருக்கும்படி அறிவுறுத்தி உள்ளதாக ராஷ்ட்ரபதி பவன் தெரிவித்துள்ளது.

------

சென்னை வண்டலூர் - பெருங்களத்தூர் இடையே உயர் அழுத்த மின் கம்பி அறுந்ததால் விரைவு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தம்; செங்கல்பட்டு - தாம்பரம் இடையே புறநகர் மின்சார ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது!

------

தமிழகத்தில் வருகிற 7ஆம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்கும்.

வெப்பநிலை இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்- சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தகவல்.

------

கடலூர், நாகை, காரைக்கால் உள்ளிட்ட துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.

அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் புயல் எச்சரிக்கை கூண்டு.

------

தேனி மாவட்டம் போடி அருகே மாட்டுமந்தையில் பணப்பட்டுவாடா செய்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் சித்ரஞ்சன் கைது செய்யப்பட்டார். பணப்பட்டுவாடாவுக்காக சித்ரஞ்சன் கைதில் வைத்திருந்த ரூபாய் 1.50 லட்சம் பணத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்.

------

கோவிட் - 19 தொற்று பரவலை கட்டுப்படுத்த அடுத்த சில நாட்களில் கடும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும் -முதலமைச்சர் திரு உத்தவ் தாக்கரே

------

இந்தியாவில் ஏழு கோடிக்கு மேற்பட்ட கோவிட் - 19 தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

------

சிவகங்கை அருகே சோதனைச்சாவடியில் காரில் ஆயுதங்களுடன் சென்ற அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வமணி கைது செய்யப்பட்டார். அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வமணி மற்றும் கார் ஓட்டுனர் வேலுமணியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

------

ஆசிய பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய தரப்பில்

 முன்னாள் உலக சாம்பியன் மிராபாய் சானு உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

------

அசாம் மாநிலத்தில் பிஜேபி வேட்பாளரின் வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தை எடுத்து சென்றது தொடர்பாக பாதுகாப்புப்படை அதிகாரிகள் இரண்டு பேரை தேர்தல் ஆணையம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.

------

மன்னார்குடி ராஜகோபால சுவாமி ஆலய தெப்ப திருவிழா நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.

------

அமெரிக்க ராணுவம் மற்றும் உளவுத் துறையின் போர்க் குற்றங்களை விசாரிக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற அதிகாரிகளுக்கு ட்ரம்ப் நிர்வாகம் விதித்த விசா தடையை அதிபர் ஜோ பைடன் நீக்கி உத்தரவிட்டுள்ளார்.

------

இந்திய சமூக சீர்திருத்தவாதி, பெண்ணியவாதி மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் கமலாதேவி சட்டோபாத்யாய் பிறந்தநாளின்று.

------

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுண் ரைட்டன்பட்டி தெருவைச் சேர்ந்த ...தி.மு.கவினர் ஓட்டுக்கு பணம் குடுக்க முயன்றதாக 4 பேர் இரவில்கைது

------

சமூக நீதியை பாதுகாப்பதற்காகவே, அஇஅதிமுக உடன் பா கூட்டணி சேர்ந்திருப்பதாக பா இளைஞர் அணித்தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

------

குழந்தைகளிடம் சிறுவயது முதலே வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று குடியரசுத் துணைத்தலைவர் திரு வெங்கையா நாயுடு கேட்டுக்கொண்டுள்ளார்.

------

Wednesday, March 17, 2021

Today News செய்திகள் 17.03.2021 | TPC

Today News 17.03.2021 | TPC

Providing Latest Breaking Updated Tamil News - தினமும் நியூஸ் உங்களுக்காக from Tamil Party Club - TPC


எளிமை, நேர்மை அரசியலில் சாத்தியம் என நம்புகிறோம், இதை யெல்லாம் தமிழகம் அத்தகைய தலைவர்களை கண்டிருக்கிறது என சகாயம் ஐஏஎஸ் கூறியுள்ளார். நேர்மையான அரசியல் எளிமையானதில்லை, அதை அடைவது கடினம்தான், ஆனால் அது சாத்தியம் என சகாயம் தெரிவித்துள்ளார்.

------

விஜய் சேதுபதி நடிப்பில் புதிய திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பொன்ராம் இயக்கும் புதிய படம் விஜய் சேதுபதியின் 46வது படமாகும். விஜய் சேதுபதியின் 46வது படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.

------

தனியார் மருத்துவ கல்லூரி மேற்படிப்பில் குறைந்த இடம் கிடைத்ததில் அதிகாரிகளின் கூட்டுச்சதி இல்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. மேற்படிப்புக்கு இடம் கிடைக்காத மாணவர்கள் தொடர்ந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

------

சென்னை, கோவை உட்பட 20 இடங்களில் நடந்த சோதனையில் ரூ.400 கோடி வருவாய் மறைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. வேளாண் பொருட்கள் விற்பனை என்று மோசடி செய்து ரூ.100 கோடிக்கு போலி ரசீது தயாரித்துள்ளதாகவும், கருப்பு பண தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

------

ராஜஸ்தானில் சிறுமியை பலாத்காரம் செய்த குற்றவாளி இளைஞருக்கு மரண தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. வழக்கு விசாரணை தொடங்கி 27 நாட்களில் பாலியல் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

------

டி.ஆர்.பி. வழக்கில் அர்னாப் கோஸ்வாமியை கைது செய்த மும்பை காவல் ஆணையர் பரம்பீர் சிங் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பரம்பீர் சிங் ஊர்க்காவல் படைத் தலைவராக நியமனம், மும்பை காவல்துறை புதிய ஆணையராக ஹேமந்த் நகரல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

------

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து கோவை தங்கம் விலகினார். வால்பாறை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் கோவை தங்கம் விலகல் என தகவல் வெளியாகியுள்ளது. .மா.கா.லிருந்து விலகிய கோவை தங்கம் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

------

ம.நீ.ம. பொருளாளர் சந்திரசேகர் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை ரூ. 8 கோடி பறிமுதல்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொருளாளர் சந்திரசேகரன் வீட்டில் வருமானவரி துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளார். திருப்பூர், கோவையில் உள்ள சந்திரசேகரின் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்திவருகிறது. தமிழக அரசின் மகப்பேறு பை உள்ளிட்ட திட்டங்களின் ஒப்பந்ததாராக சந்திரசேகர் உள்ளார் என்பது குறிப்பிட தக்கது.

------

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்டார். விவசாயிகளின் நலன்களைக் காக்க திரிணாமுல் காங்கிரஸ் பாடுபடுகிறது. மேற்குவங்கத்தின் மேம்பாட்டுக்காக எனது வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.

------

நாட்டுக்கான நல்ல திட்டங்களை நாங்கள் வகுத்து வைத்துள்ளோம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். மக்கள் சேவை செய்ய விரும்புவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் சந்தர்ப்பம் இது, மாற்று அரசியலை முன்னெடுக்கும் எங்களுக்கு ஆதரவு தாருங்கள் என தெரிவித்துள்ளார்.

------

திருமங்கலம் அருகே கப்பலூர் தொழிற்பேட்டையில் நிர்வாக அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். வாக்காளர்களுக்கு வழங்க மடிக்கணினி, பிளாஸ்டிக் வாளிகள் 500-க்கும் மேற்பட்டவைகள் இருப்பதாக திமுகவினர் அளித்த புகாரின் பேரில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

------

சிவகாசியில் தடை செய்யப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கவிதா நகரில் பூச்சட்டி தயாரிக்கும் நிறுவனத்தில் அட்டை பெட்டியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போதைப் பொருட்கள் பதுக்கியது தொடர்பாக 2 பேரை காவல்த்துறையினர் தேடி வருகின்றனர்.

------

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், திமுக தலைவர் மு..ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தனர். தங்கள் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் மு..ஸ்டாலின் கருத்து தெரிவித்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மனுவில் கூறி உள்ளனர்.

------

தமிழகத்தில் தப்பித்தவறி திமுக ஆட்சிக்கு வந்துவிட்டால், மக்களின் செல்வங்கள் அனைத்தும் சூறையாடப்படும் என டிடிவி தினகரன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

------

தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்தவண்ணம் உள்ளது. இதனால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது. பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வரவேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

------

Today News செய்திகள் 21.02.2025 | TPC

 Today News 21.02.2025 | TPC Providing Latest Breaking Updated Tamil News - தினமும் நியூஸ் உங்களுக்காக from Tamil Party Club - TPC ...